LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

அதிகாரம் புதயாத சமன்பாடு

ஐ£ப் வண்டிகள் உறும
சப்பாத்துகள் ஒலிக்க
மக்கள் மத்தியில்
ஏந்திய ஆயுதங்களுடன்
காக்கி உடை ராட்சதர்கள் போல்
அவர்கள்.

அவர்கள் ஏந்தும் ஆயுத முனைகளின் மோப்பங்களுக்கு
முகம் கொடுக்காது,
மெளனமாய் மக்களோடு மக்களாய் இவர்கள்
நீட்டிய ஆயுதங்களில்
பீதியின் நிழல்.
மெளன ஊடாட்டத்தில் விடுதலை விதக்கக்
காத்திரக்கும் உள்வாங்கல்
வீர்யத்தின் ஒளிச்சிதறல்.

அந்த ஒளிச்சிதறலில் கண்ணிமைப் புருவங்கள் போல்
பேச்சற்று உள்நடுங்கும் ஆயுதப் பா¢வாரங்கள்.

அவர்களின் காக்கி முகாம்கள் கூடக் கூட
இவர்களின் விடுதலைக் குகைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.
அவர்களின் ஆயுதம் கக்கிய சன்னங்களில் இருவர் கொலையுண்ண,
நால்வர் புதிதாக ஐனித்தெழும் இவர்களின் விடுதலை
இனவிருத்தி பற்றி அறியாத அதிகாரம்.
சர்வாதிகாரம் என்பது விடுதலையை ஒடுக்குவதாகக்
கூறிக்கொண்டு, தன்னை அறியாமலே அதைப் பிறப்பிக்க
யோனிவாயிலில் காத்திருக்கும் மருத்துவச்சி.

சர்வாதிகாரம் சமன் விடுதலை.
எத்தனைதரம் சா¢த்திரம் இதைக் கற்பித்துக் கொடுத்தாலும்
அதிகார அமர்வுகளுக்கு புதய முடியாது போய்விட்ட,
மர்மச் சமன்பாடு.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.