தேவையானவை:
பச்சரிசி -1கிலோ வெல்லம்-3/4கிலோ எலக்காய்-7 வெள்ளை எள்-2 தேக்கரண்டி நெய்-1 டேபிள்ஸ்பூன் எண்ணை- தேவைக்கேற்ப சுக்கு-சிறிது
செய்முறை:
1.அரிசியை நன்றாக கழைந்து தண்ணிர் உற்றி 2 மணி நேரம் ஊறவிடவும், பின்பு அரிசியை உலர்த்தி, மிக்சியில் அரைக்கவும். 2.ஒருப்பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை அடுப்பில் வைக்கவும். 3.வெல்லம் கரைந்தவுட்ன் வடிகட்டவும், கணமான பாத்திரத்தில் ஊற்றி பாகு காச்சவும், 4.வெல்ல பாகு உருண்டை பதம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும் 5.அரிசி மாவில் சுக்கு, எலக்காய்,அரைத்து கலக்கவும், 6.மாவை சிறிது, சிறிதாக பாகில் சேர்க்கவும், சப்பாத்தி பதம் வந்தவுடன் நிறுத்தவும். 7.மாவு மேலே நெய் சிறிது தட்டி வைக்கவும். மாவை மூடி வைக்கவும் 8.ஒர் நாள் கழித்து, வாழை இலையில் நெய்த்தடவி எள் சேர்த்து மிதமான தீயில் ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும். 9.மிக முறுகலான மெருதுவான அதிரசம் தயார்.
|