உன் ஆசை என்ன என்று கேட்டேன் ... அதிசயக்குழந்தையிடம்.....?
ஆசையில்லாமல் இருக்கவே ... ஆசை என்றான் ஒரே வரியில் ....!!!
என்னப்பா சொல்கிறாய் ....? ஆமா ஆசானே .....!!!
ஆசையே அனைத்து துன்பத்துக்கும் .... மூல காரணி ......!!! நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடே .... கோபம் ,,,,,,,,,,,,!!! கோபத்தின் வெளிப்பாடே .... கொடூரம் ...........!!! கோபத்தை குறையுங்கள் ..... என்பது தவறு - ஆசையை .... குறையுங்கள் என்பதே சரியானது .....!!!
பெண் ஆசை .... நடத்தையை கெடுக்கும் ...... மண் ஆசை ..... நாட்டை கெடுக்கும் ...... பொன் ஆசை ...... பெண்ணையே கெடுக்கும் .......!!!
ஆசையை குறைப்பது எளிதல்ல .... ஆசையை வரிசைப்படுத்துங்கள் .... அந்த வரிசையில் இயலுமையை .... பாருங்கள் நிறைவேறக்கூடிய .... அவசியமான ஆசைக்கு ஆசைப்படுங்கள் .....!!! அதிசயக்குழந்தை வசனக்கவிதை கவிப்புயல் இனியவன்
|