LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பூமியின் வெப்பநிலை உயர்வு குறித்து கவலை பட வேண்டாம் - அமெரிக்கா விஞ்ஞானிகள் புதிய தகவல் !!!

சுற்றுச் சூழல் மாசுபாட்டால், பூமியின் வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் அதிகரித்து வருவதாக, உலகின் பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் கூறிவருகின்றனர். இந்நிலையில், ஆர்க்டிக் கடல் பகுதிகளில், உள்ள பனிப்பாறைகளின் அளவு, கடந்த ஓராண்டில், 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வருடம் ஆகஸ்டு மாதம், ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் செயற்கைக் கோள் மூலம் படம் எடுக்கப்பட்டன. அதே போல் கடந்த மாதம், அதே பகுதியில் படம் எடுக்கப்பட்டது. இந்த ஓர் ஆண்டு காலத்தில் மட்டும், ஆர்க்டிக் கடல் பகுதியில் பனிப் பாறைகள், கடந்த ஆண்டை விட, 60 சதவீதம் அதிகரித்துள்ளன. இதற்கான சான்றுகள், செயற்கை கோள் படத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. பூமி வெப்ப மயமாதல் மட்டுமே, பனிப்பாறைகள் உருகக் காரணம் என்பது தவறு. பூமியில் நடைபெறும் பல்வேறு மாற்றங்களால், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பது இயற்கையே. இந்த நிகழ்வு பூமி குளிர்வடைந்து வருகிறதா என்ற சந்தேகத்தை விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆர்க்டிக் கடல் பகுதியில் கடந்த ஆண்டை விட பனிப்பாறைகள் அதிக அளவில் உருவாகியுள்ளன.எனவே, பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பு குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

by Swathi   on 13 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.