LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை

 

மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத் 
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே 
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி 
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 569 
ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே 
சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப் 
போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழலி னைகாட்டி 
வேந்த னாம்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 570 
நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக் 
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப் 
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை 
அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே. 571 
பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க் 
கருங் குழலினனார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத் 
திருந்து சேவடிச் சிலம்பனை சிலம்பிடத் திருவொடும் அகலாத 
அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியனே. 572 
மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங் 
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவிய திரிவேனை 
வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி 
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே. 573 
வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும் 
பிணைந்து வாயிதழ்ப் பொருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக் 
குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி 
அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 574 
இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித் 
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள் 
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி 
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 575 
ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை 
ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுதந் தொளிவாக்கிப் 
பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பொருங் கருணையால் 
ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே. 576 
பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல 
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை 
இச்ச கத்தரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி 
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 577 
செறியும் இப்பிறவிப் பிறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங் 
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை 
இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி 
அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 578 

 

மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத் 

தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே 

பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி 

மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 569 

 

ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே 

சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப் 

போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழலி னைகாட்டி 

வேந்த னாம்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 570 

 

நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக் 

கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப் 

பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை 

அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே. 571 

 

பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க் 

கருங் குழலினனார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத் 

திருந்து சேவடிச் சிலம்பனை சிலம்பிடத் திருவொடும் அகலாத 

அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியனே. 572 

 

மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங் 

கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவிய திரிவேனை 

வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி 

ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே. 573 

 

வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும் 

பிணைந்து வாயிதழ்ப் பொருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக் 

குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி 

அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 574 

 

இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித் 

தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள் 

மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி 

அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 575 

 

ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை 

ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுதந் தொளிவாக்கிப் 

பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பொருங் கருணையால் 

ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே. 576 

 

பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல 

இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை 

இச்ச கத்தரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி 

அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 577 

 

செறியும் இப்பிறவிப் பிறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங் 

கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை 

இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி 

அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 578 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.