LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 506 - அரசியல்

Next Kural >

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக, அவர் மற்றுப் பற்று இலர் - அவர் உலகத்தோடு தொடர்பு இலர், பழி நாணார் - ஆகலான் பழிக்கு அஞ்சார். ('பற்று இலர்' என்பதனால் 'சுற்றம்' என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்.
தேவநேயப் பாவாணர் உரை:
அற்றாரைத் தேறுதல் ஓம்புக - மகப்பேறும் உறவினரும் இல்லாதவரை வினைத்தலைவராகத் தெளிதலை விட்டு விடுக ; அவர் மற்றுப் பற்று இலர் - அவர் வேறு தொடர்பில்லாத வராதலால் ; பழிநாணார் - பழிக்கு அஞ்சார். பிள்ளைகளைப் பெறாதவர்க்குப் பிறரிடத்து அன்புண்டாகா தென்பதும் , உற்றா ருறவினரில்லாதவர்க்குப் பழிபளகு (பாவம்) பற்றிய அச்சமிராதென்பதும் , பொதுவான உலக நம்பிக்கை . ஆதலால் , அத்தகையோரை வினைக்கமர்த்தின் ,குடிகள் கெடுவதொடு பொறுப்பற்ற வினையால் அரசுங் கெடும் என்பதாம் . 'பற்றிலர்' என்பதனால் உறவினர் என்பது வருவிக்கப்பட்டது . ஓம்புதல் காத்தல் ; இங்கு நிகழாவாறு காத்தல்.
கலைஞர் உரை:
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.
Translation
Beware of trusting men who have no kith of kin; No bonds restrain such men, no shame deters from sin.
Explanation
Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.
Transliteration
Atraaraith Therudhal Ompuka Matravar Patrilar Naanaar Pazhi

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >