LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

கணினியில் அதிக நேரம் வேலை செய்பவரா நீங்கள் !!

 

இன்றைய இயந்திர உலகில் கணினி என்பது நமது மூன்றாவது கை போல் மாறி விட்டது. இதனால் கணினியை அதிக நேரத்திற்கு பயன்படுத்தும் சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.  ஆனாலும் அதிக நேரம் கணினியில் செலவிடும் போது என்னென்ன பாதிப்புகள் உண்டாகின்றன என்று அறிய வரும்போது அதிர்ச்சி தருகிறது.
கண்கள் பாதிப்பு : 
கண்ணை இமைக்காமல் அதிக நேரம் கணினித் திரையயே பார்த்துக் கொண்டிருப்பது கண் அழுத்தம், மற்றும் விழி உலர்வு போன்ற நோய்க்கு காரணமாகிறது. குறிப்பாக கிட்டப் பார்வை  உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. 
அதிக வெளிச்சமான் திரையை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது கண்களை மிகவும் பாதிக்கிறது. இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் ஆபத்தை மெல்ல நாம் உணருமுன் பார்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும்.கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி இதெல்லாம் இதன் முன்னெச்சரிக்கை.
கணினினி திரை வெளிச்சத்தை மிதமாக வைத்துக்கொள்ளவும். கணினி இருக்கும் அறையில் ஓரளவு வெளிச்சம் இருக்க வேண்டும். அடிக்கடி கண்ணை இமைப்பது நல்லது.
இடையிடையே கண்ணை முழுவதுமாக மூடி கண்ணுக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும். அடிக்கடி திரையிலிருந்து பார்வையை விலக்கி தூர உள்ள பொருளை காட்சியைப் பார்க்க வேண்டும்.
மானிட்டருக்கு பின் புறம் ஜன்னல் இருந்தால் நல்லது. குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள உலர்ந்த குளிர் காற்று கண் உலர்வுக்குக் காரணமாகும்.
கை மணிக்கட்டு பாதிப்பு : 
எப்போதும் கீ போர்டில் தட்டிக் கொண்டிருப்பதும். மவுசை கிளிக்கிக் கொண்டிருப்பதும் விரல்க்ள், மணிக்கட்டு ஆகியவற்றில் வலி ஏற்படுத்துகிறது .இது RSI (Repetitive Strain Injury) எனப்படுகிறது. இது வெறும் வலி என்று அலட்சியப்படுத்தாதீர்கள். கைகளில் மின்சாரம் தாக்கினால் என்ன பாதிப்பு உண்டாகுமோ அந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
ஒரு சிறிய துண்டு துணி அல்லது பஞ்சு போன்ற பொருளை மணிக்கட்டு சப்போர்ட்டாக வைத்துக் கொண்டு மவுசில் வேலை செய்யுங்கள். இதற்கென்றே தயாரிக்கப்பட்ட மவுஸ் பேட்களும் கிடைக்கின்றன.
கைகளும் கீ போர்டும் சரியான தூரத்தில் சரியான உயரத்தில் இருக்கவேண்டும். அப்போது தான் கைக்கு அதிக ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கும்.
கழுத்து வலி : 
கம்ப்யூட்டரின் திரையை பார்க்கும் போது நேராகப் பார்க்கும் நிலையில் இருக்கை உயரம் இருக்க வேண்டும். கழுத்தை திருப்பி ஒரு பக்கமாகவோ அண்ணாந்தோ, குனிந்தோ பார்ப்பது கழுத்து வலியையும் நாளடைவில் எலும்புத் தேய்வுகளையும் ஏற்டுத்தும்.
முதுகு வலி : 
நல்ல வசதியான இருக்கை, சரியான உயரத்தில் இருக்க வேண்டும். முதுகை வளைக்காமலும் திரும்பாமலும் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும். தவறான பொசிசனின் உட்கார்ந்திருப்பது, கை கால்களுக்கு செல்லும் சரியான இரத்த ஓட்டத்தை பாதிக்கும். 
சமூக பாதிப்பு: 
என்னேரமும் கம்ப்யூட்டரிலேயே நேரத்தை செலவிட்டால் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் போன்ற நம்மைச் சார்ந்தவர்களிடம் செலவிட நேரம் கிடைப்பதில்லை. இது அவர்களை நம்மிடமிருந்து பிரித்து பல்வேறு பிரச்சினகளை உருவாக்கும்.
தினசரி கொஞ்ச நேரமாவது முற்றிலும் கணினியை மறந்து நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காக ஒதுக்க வேண்டும்.
அதிக கொலெஸ்ட்ரால் ஆபத்து: 
எப்போதும் கம்ப்யூட்டர் முன்னே உட்கார்ந்தே இருப்பதால் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவு உண்ணும் உணவை விட குறைவாக இருக்கும். இதனால் இரத்ததில் சேரும் அதிகப்படியான கொழுப்பு சத்து கொலெஸ்ட்ராலாக இரத்தக் குழாய்களில் படிகிறது. இது நாளடைவில் இரத்தக் குழாய்களைக் குறுகச் செய்து உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்குகிறது. அதோடு இதய நோய். சர்கரை நோய் எல்லாம் உருவாகி ஆயுளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடும்.
தொடர்ந்து கணினியில் இருக்காமல் இடையிடையே எழுந்து சென்று சில தூரம் நடைப் பயிற்சி கொள்வது மிகவும் நல்ல பழக்கம்.
தொடர்ந்து பணிபுரியத் தேவையான புத்துணர்வு இது தரும்.

இன்றைய இயந்திர உலகில் கணினி என்பது நமது மூன்றாவது கை போல் மாறி விட்டது. இதனால் கணினியை அதிக நேரத்திற்கு பயன்படுத்தும் சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.  ஆனாலும் அதிக நேரம் கணினியில் செலவிடும் போது என்னென்ன பாதிப்புகள் உண்டாகின்றன என்று அறிய வரும்போது அதிர்ச்சி தருகிறது.


கண்கள் பாதிப்பு : 


கண்ணை இமைக்காமல் அதிக நேரம் கணினித் திரையயே பார்த்துக் கொண்டிருப்பது கண் அழுத்தம், மற்றும் விழி உலர்வு போன்ற நோய்க்கு காரணமாகிறது. குறிப்பாக கிட்டப் பார்வை  உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. 


அதிக வெளிச்சமான் திரையை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது கண்களை மிகவும் பாதிக்கிறது. இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் ஆபத்தை மெல்ல நாம் உணருமுன் பார்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும்.கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி இதெல்லாம் இதன் முன்னெச்சரிக்கை.


கணினினி திரை வெளிச்சத்தை மிதமாக வைத்துக்கொள்ளவும். கணினி இருக்கும் அறையில் ஓரளவு வெளிச்சம் இருக்க வேண்டும். அடிக்கடி கண்ணை இமைப்பது நல்லது.


இடையிடையே கண்ணை முழுவதுமாக மூடி கண்ணுக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும். அடிக்கடி திரையிலிருந்து பார்வையை விலக்கி தூர உள்ள பொருளை காட்சியைப் பார்க்க வேண்டும்.


மானிட்டருக்கு பின் புறம் ஜன்னல் இருந்தால் நல்லது. குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள உலர்ந்த குளிர் காற்று கண் உலர்வுக்குக் காரணமாகும்.


கை மணிக்கட்டு பாதிப்பு : 


எப்போதும் கீ போர்டில் தட்டிக் கொண்டிருப்பதும். மவுசை கிளிக்கிக் கொண்டிருப்பதும் விரல்க்ள், மணிக்கட்டு ஆகியவற்றில் வலி ஏற்படுத்துகிறது .இது RSI (Repetitive Strain Injury) எனப்படுகிறது. இது வெறும் வலி என்று அலட்சியப்படுத்தாதீர்கள். கைகளில் மின்சாரம் தாக்கினால் என்ன பாதிப்பு உண்டாகுமோ அந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.


ஒரு சிறிய துண்டு துணி அல்லது பஞ்சு போன்ற பொருளை மணிக்கட்டு சப்போர்ட்டாக வைத்துக் கொண்டு மவுசில் வேலை செய்யுங்கள். இதற்கென்றே தயாரிக்கப்பட்ட மவுஸ் பேட்களும் கிடைக்கின்றன.


கைகளும் கீ போர்டும் சரியான தூரத்தில் சரியான உயரத்தில் இருக்கவேண்டும். அப்போது தான் கைக்கு அதிக ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கும்.


கழுத்து வலி : 


கம்ப்யூட்டரின் திரையை பார்க்கும் போது நேராகப் பார்க்கும் நிலையில் இருக்கை உயரம் இருக்க வேண்டும். கழுத்தை திருப்பி ஒரு பக்கமாகவோ அண்ணாந்தோ, குனிந்தோ பார்ப்பது கழுத்து வலியையும் நாளடைவில் எலும்புத் தேய்வுகளையும் ஏற்டுத்தும்.


முதுகு வலி : 


நல்ல வசதியான இருக்கை, சரியான உயரத்தில் இருக்க வேண்டும். முதுகை வளைக்காமலும் திரும்பாமலும் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும். தவறான பொசிசனின் உட்கார்ந்திருப்பது, கை கால்களுக்கு செல்லும் சரியான இரத்த ஓட்டத்தை பாதிக்கும். 


சமூக பாதிப்பு: 


என்னேரமும் கம்ப்யூட்டரிலேயே நேரத்தை செலவிட்டால் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் போன்ற நம்மைச் சார்ந்தவர்களிடம் செலவிட நேரம் கிடைப்பதில்லை. இது அவர்களை நம்மிடமிருந்து பிரித்து பல்வேறு பிரச்சினகளை உருவாக்கும்.


தினசரி கொஞ்ச நேரமாவது முற்றிலும் கணினியை மறந்து நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காக ஒதுக்க வேண்டும்.


அதிக கொலெஸ்ட்ரால் ஆபத்து: 


எப்போதும் கம்ப்யூட்டர் முன்னே உட்கார்ந்தே இருப்பதால் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவு உண்ணும் உணவை விட குறைவாக இருக்கும். இதனால் இரத்ததில் சேரும் அதிகப்படியான கொழுப்பு சத்து கொலெஸ்ட்ராலாக இரத்தக் குழாய்களில் படிகிறது. இது நாளடைவில் இரத்தக் குழாய்களைக் குறுகச் செய்து உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்குகிறது. அதோடு இதய நோய். சர்கரை நோய் எல்லாம் உருவாகி ஆயுளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடும்.


தொடர்ந்து கணினியில் இருக்காமல் இடையிடையே எழுந்து சென்று சில தூரம் நடைப் பயிற்சி கொள்வது மிகவும் நல்ல பழக்கம்.


தொடர்ந்து பணிபுரியத் தேவையான புத்துணர்வு இது தரும்.

by Swathi   on 06 Mar 2014  2 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
28-Mar-2014 23:53:13 தனச்செகரனே.v said : Report Abuse
இட் இச் வெரி உசெபிஉல் டு ஆல் தி ஹுமன் அண்ட் இட் இச் வெரி எஅசி மருத்துவ குறிப்புகள்
 
06-Mar-2014 21:49:37 லோகேஷ் said : Report Abuse
இது மிகவும் பயனுள்ள செய்தி அனைவரும் பகிரவும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.