திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அடுக்கி வரினும் - இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் - தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மனனழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண்படும். இது மனனழிவில்லாதவன் உற்றதுன்பம் மேன்மேல் வரினுங் கெடுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அடுக்கி வரினும் - இடைவிடாது துன்பங்கள் மேன்மேல் தொடர்ந்து வரினும்; அழிவு இலான் -மனங் கலங்காதவன்; உற்ற இடுக்கண் இடுக்கண் படும் -அடைந்த துன்பங்களே துன்பப்பட்டுப்போம். துன்பம் துன்பப்படும் என்பதில் ஆட்படையணி குறிப்பாக அமைந்துள்ளது. அடுக்குதல் என்பது ஒருவகைத் துன்பமும் பல வகைத்துன்பமும் தழுவும்.
கலைஞர் உரை:
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.
Translation
When griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart.
Explanation
The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).