LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

அகஸ்டஸ் ஸ்பைஸ்

இன்று நீங்கள் நெரிக்கின்ற எங்களது குரலைவிட , எமது

மவுனம் ஆற்றல் மிக்க சக்தியாக வெளிப்படும் காலம் வரும் .


எட்டு மணி நேரம் கேட்டுப் போராடி தொழிலாளர் வர்க்கத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்தவர் அகஸ்டஸ் ஸ்பைஸ் (Augustus Vincent Theodore Spies) ஆவார் . இவர் தீவிர தொழிலாளர் ஆதரவாளர் , தொழிற்சங்கத் தலைவர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் . இவர் மத்திய ஜெர்மனியில் உள்ள ஹெஸ்ஸா மாநிலத்தில் 1855 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பிறந்தார் . இவரது தந்தை அரசின் வனத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார் . அவர் இறந்தபிறகு இவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் குடியேறினார் . தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார் .1877 ஆம் ஆண்டில் சோசலிச தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார் . சர்வதேச தொழிலாளர் சங்கத்தில் இணைந்து தொழிலாளர்களுக்காக போராடினார் .

எட்டு மணி வேலை நேரம் கேட்டு தொழிலாளர்களின் போராட்டங்கள் பேரணிகள் நடந்தன . தொழிலாளர்கள் ஒன்று சேராமல் தங்களால் வெற்றி பெற முடியாது என பொதுக் கூட்டங்களில் பேசினார் . 8 மணி வேலை நேரம் , பேச்சுச்சுதந்திரம் , தொழிலாளர் அமைப்பாக திரட்டுவதற்கான சுதந்திரம் வேண்டி ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 1886 ஆம் ஆண்டு மே 4 இல் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்றது . அப்போது அடையாளம் தெரியாத ஒருவரால் வீசப்பட்ட குண்டு வெடித்து 7 போலிஸ் ,4 பொதுமக்கள் இறந்தனர் . இதனை ஹேமார்க்கெட் படுகொலை என்றனர் . இக்கொலைக்கு சதி திட்டம் தீட்டினார் என அகஸ்டஸ் ஸ்பைஸ் கைது செய்யப்பட்டார் . பின்னர் 1887 ஆம் ஆண்டு நவம்பர் 11 இல் தூக்கிலிடப்பட்டார் . இது உலகத்தொழிலாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.