LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

ஆங் சாங் சூ கி

மக்களைக் கெடுப்பது அதிகாரம் அல்ல , அச்சம்தான் .

அதிகாரத்தை வைத்திருப்போர்கள் அதை இழந்து

விடுவோமோ என்ற அச்சம் கெடுக்கிறது .


உலகம் முழுவதும் ஜனநாயக உரிமைக்காகவும் , மக்களாட்சிக்காகவும் , மனித உரிமைக்காகவும் போராடிக்கொண்டிருப்போர்க்கு உத்வேகத்தை தந்து கொண்டிருப்பவர் ஆங் சாங் சூ கி ( Aung San Suu Kyi ) ஆவார் . இவர் 1945 ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று பர்மாவில் பிறந்தார் . இவரின் தந்தை பிரிட்டிஷ் அரசின் கீழ் பிரதம அமைச்சராக இருந்தார் . 1947 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார் . சூகி தனது படிப்பை இந்தியாவிலும் , அமெரிக்காவிலும் முடித்தார் . ஐ . நா . செயலகத்தில் உதவிச் செயலாளராகப் பணிபுரிந்தார் . அப்போது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தொண்டராக இருந்து சேவை புரிந்தார் . இவருடைய தாயார் இறந்தபோது மியான்மார் திரும்பினார் .

பர்மாவில் ராணுவ ஆட்சி நடந்துகொண்டிருந்தது . வேலையில்லாத் திண்டாட்டம் , ஊழல் , பொருளாதார நெருக்கடியில் பர்மா சிக்கித் தவித்தது . சூ கி 1988 ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபட்டார் . ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடினார் . இதற்காக அவர் சிறையிலும் , வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டார் .1991 ஆம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியபோதும் அவர் சிறையிலேயே இருந்தார் . மியான்மரில் நடந்த தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த போதும் ராணுவ ஆட்சி அவரை ஆட்சியில் ஏற அனுமதிக்கவில்லை . அவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் சிறையில் இருந்தார் .2010 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார் . மக்களாட்சிக்காக தொடர்ந்து போராடி வருகிறார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.