கண்களால் காதல் தூதினை சொல்லி
கன்னியிவள் கண்கள் வாடுவதனை
அவன் அறிவது எப்போது?
காலையிலும் குளிர் மாலையிலும்
மங்கையிவள் தென்றல் குளிரில் வாடுவதனை
அவன் இளநெஞ்சம் அறியுமோ?
அரும்பிய முல்லை செண்டு வாடுவதனைக்
கண்டு கன்னியிவள் மனம் வெதும்புவதனை
என் கண்களும் பொறாமே! –விரிந்த
மலரில் தேனினை உண்ண வரும்
மயங்கிசை வண்டிதை உணருவதனை
அவன் மனம் அறியுமோ?
தென்காற்று மெல்ல வீசிச் செல்ல -இத்
தேன்மலர் தனிமையில் வாடுவதனை
அவன் உள்ளம் எப்போதறியுமோ?
- இல.பிரகாசம்
|