அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றபோது எல்லோருமே பார்த்துக்கொண்டு நின்றார்கள். இன்னும் சா¢யாகச் சொல்வதானால், அவன் சுடப்படுவதைக் காண்பதற்காகவே அவர்கள் நின்றனர்.
அவனுடைய வீட்டைக் கொளுத்த வந்தவர்கள், பெட்டிக் கடையில் பாண் வாங்கவந்த இரண்டு கிழவிகள், கையில் கற்களுடன் ஏராளமான சிறுவர்கள் மற்றும், அன்று வேலைக்குப் போகாத மனிதர்கள், பெண்கள்.
இவர்கள் அனைவா¢ன் முன்னிலையில் நிதானமாக அவன் இறந்து போனான். அவன் செய்ததெல்லாம் அதிகமாக ஒன்றுமில்லை; அவனுடைய வீட்டிலும் அதிகமாக ஒன்றுமிருந்ததில்லை. ஆனால், தமிழர்களுடைய வீட்டைக் கொள்ளையிடுவதை யார்தான் தடுக்க முடிகிறது? அன்று காலையும் அதுதான் நடந்தது.
ஜம்பதுபேர், அவனுடைய வீட்டை உடைக்க வந்தனர். வனத் திணைக்கள அதிகா¡¢யான அவனுடைய அப்பாவின் துவக்கு நீண்ட காலமாய் முன்னறைப் பரணின் மேலே இருந்தது. துவக்கை இயக்க அவனும் அறிவான்.
கொள்ளையடிக்க வந்த சிங்களவர்மீது துவக்கால் சுடுவதைப் புத்தர்கூட அனுமதிக்க மாட்டார் என்பதை அரசு அறியும்! அமைச்சர்கள் அறிவர்; அவன் எப்படி அறிவான்? ராணுவம், கடற்படை, விமானப்படை என, எல்லோருமாக முற்றுகையிட்டு அவனுடைய வீடு எ¡¢ந்துவருகிற புகையின் பின்னணியில் அவனைக் கொல்வதற்குமுன்,
அவன் செய்ததெல்லாம் அதிகம் ஒன்றுமில்லை. இரண்டு குண்டுகள். ஒன்று ஆகாயத்திற்கு அடுத்தது பூமிக்கு...
|