ஸ்ரீசக்கரத்தின் மீது அமர்ந்தபடி, சின்முத்திரை திகழ, அழகுறக் காட்சி தருகிறார் ஐயப்ப சுவாமி. எனவே, இந்த தலத்திற்கு வந்து ஐயப்பனை
தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் நீங்கும்; சகல ஐஸ்வரியங்களோடு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.
இங்கு, மாதம் ஒரு முறை ஸ்ரீசக்கர பூஜை விமரிசையாக நடைபெறுகிறது.பிரதோஷம் ஏகாதசி, கிருத்திகை, சிவராத்திரி, போன்ற நாட்களில் சிறப்பு
வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. விஜயதசமி நன்னாளில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் எனும் நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக
நடைபெறுகிறது. மணக்க மணக்க சந்தனம், திவ்வியமான தீர்த்தம், சுவாமிக்கு அணிவித்த மலர்கள் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
ஐயப்பனை மனதார தரிசித்து, பிரசாதங்களை பெற்று சென்றால், நம் வாழ்க்கையையும் மணக்க செய்வான் மணிகண்டன்.சுவாமி குடிகொண்டிருக்கும்
கருவறையில் மேற்கூறையை தங்கத்தில் வேய்ந்திருக்கிறது ஆலய நிர்வாகம்.
ஸ்ரீசக்கரத்தின் மீது அமர்ந்தபடி, சின்முத்திரை திகழ, அழகுறக் காட்சி தருகிறார் ஐயப்ப சுவாமி. எனவே, இந்த தலத்திற்கு வந்து ஐயப்பனை தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் நீங்கும், சகல ஐஸ்வரியங்களோடு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள். இங்கு, மாதம் ஒரு முறை ஸ்ரீசக்கர பூஜை விமரிசையாக நடைபெறுகிறது.பிரதோஷம் ஏகாதசி, கிருத்திகை, சிவராத்திரி, போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
விஜயதசமி நன்னாளில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் எனும் நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. மணக்க மணக்க சந்தனம், திவ்வியமான தீர்த்தம், சுவாமிக்கு அணிவித்த மலர்கள் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஐயப்பனை மனதார தரிசித்து, பிரசாதங்களை பெற்று சென்றால், நம் வாழ்க்கையையும் மணக்க செய்வான் மணிகண்டன். சுவாமி குடிகொண்டிருக்கும் கருவறையில் மேற்கூறையை தங்கத்தில் வேய்ந்திருக்கிறது ஆலய நிர்வாகம். |