இங்கு ஐயப்பன் பஞ்சலோக மூர்த்தியாக அருபாலிக்கிறார்.ஐயப்பன் சன்னதிக்கு கீழ்தளத்திலுள்ள மண்டபச் சுவரில் ஐயப்பனின் பல வித சுதை சிற்பங்கள்
உள்ளன. ஆரியங்காவு போல பூரணையுடன் குடும்ப நிலையை காட்டும் ஐயப்பனும், பின்புற சுவரில் அச்சன்கோயில் போல இரண்டு கால்களையும் மடக்கி,
வலக்கையில் அக்னியுடன், யோகப்பட்டை அணிந்து பூர்ணபுஷ்கலாவுடன் ஒரு ஐயப்பனும் உள்ளனர். இடப்புறத்தில் காந்தமலையில் உள்ளது போல், பத்து
கரங்களுடன் தசபுஜ ஐயப்பன் காட்சி தருகிறார். யோகப்பட்டை அணிந்திருக்கும் இவர் கைகளில், மகாவிஷ்ணுவிற்குரிய சக்கரம், புல்லாங்குழல், வில், அம்பு,
சூலம், கத்தி வைத்திருக்கிறார்.இங்குள்ள உற்சவர் சிலை, சபரிமலையில் ஆறாட்டு உற்சவத்தில் பங்கேற்கும் உற்சவரின் அமைப்பிலேயே வடிக்கப் பட்டுள்ளது.
உற்சவரின் இடது கையில் வில், அம்பு இருக்கிறது. வலக்கை வரம் தருகிறது. மாளிகைப்புறத்தம்மன், வட்ட வடிவ கண்ணாடி பிம்பம் போல காட்சியளிக்கிறாள்.
திருமண தடையுள்ள பெண்கள் இவளுக்கு, மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி படைத்து வழிபட்டு, அந்த சட்டைத்துணியை தைத்து போட்டுக் கொள்கிறார்கள்.
தான் திருமணமாகாமல் கன்னியாக இருப்பதைப் போல, மற்ற பெண்களும் சிரமப்படக்கூடாது என்ற கனிவான எண்ணம் கொண்டவளாக இவளைச்
சித்தரிக்கிறார்கள்.
இங்கு ஐயப்பன் பஞ்சலோக மூர்த்தியாக அருபாலிக்கிறார். ஐயப்பன் சன்னதிக்கு கீழ்தளத்திலுள்ள மண்டபச் சுவரில் ஐயப்பனின் பல வித சுதை சிற்பங்கள் உள்ளன. ஆரியங்காவு போல பூரணையுடன் குடும்ப நிலையை காட்டும் ஐயப்பனும், பின்புற சுவரில் அச்சன்கோயில் போல இரண்டு கால்களையும் மடக்கி, வலக்கையில் அக்னியுடன், யோகப்பட்டை அணிந்து பூர்ணபுஷ்கலாவுடன் ஒரு ஐயப்பனும் உள்ளனர்.
இடப்புறத்தில் காந்தமலையில் உள்ளது போல், பத்து கரங்களுடன் தசபுஜ ஐயப்பன் காட்சி தருகிறார். யோகப்பட்டை அணிந்திருக்கும் இவர் கைகளில், மகாவிஷ்ணுவிற்குரிய சக்கரம், புல்லாங்குழல், வில், அம்பு, சூலம், கத்தி வைத்திருக்கிறார்.இங்குள்ள உற்சவர் சிலை, சபரிமலையில் ஆறாட்டு உற்சவத்தில் பங்கேற்கும் உற்சவரின் அமைப்பிலேயே வடிக்கப் பட்டுள்ளது. உற்சவரின் இடது கையில் வில், அம்பு இருக்கிறது.
வலக்கை வரம் தருகிறது. மாளிகைப்புறத்தம்மன், வட்ட வடிவ கண்ணாடி பிம்பம் போல காட்சியளிக்கிறாள். திருமண தடையுள்ள பெண்கள் இவளுக்கு, மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி படைத்து வழிபட்டு, அந்த சட்டைத்துணியை தைத்து போட்டுக் கொள்கிறார்கள். தான் திருமணமாகாமல் கன்னியாக இருப்பதைப் போல, மற்ற பெண்களும் சிரமப்படக்கூடாது என்ற கனிவான எண்ணம் கொண்டவளாக இவளைச் சித்தரிக்கிறார்கள். |