இங்குள்ள மூலவர் விமானம் சிலந்தி வலை போல கூம்பு வடிவில் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.மலைநாட்டிலுள்ள திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக
இருந்தது. இதை அனந்தன் காடு என்று அழைத்தனர். இப்பகுதியை ஆண்ட கர மகாராஜா பல கோயில்களை கட்டினார். ஒருசமயம், காட்டு வழியே அவர் சென்று
கொண்டிருந்த போது, சிலந்திகள் வலை பின்னிய ஒரு இடத்தில் சாஸ்தா சிலை கிடந்ததைக் கண்டார். அதை ஊருக்குள் கொண்டு சென்று கோயில் கட்ட முடிவு
செய்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சாஸ்தா, என்னை ஊருக்குள் கொண்டு வர முயற்சிக்காதே. நான் கானகத்தில் இருப்பதையே விரும்புபவன்.
சிலந்திகள் வலை கட்டியிருக்கும் இடத்திலேயே கோயில் எழுப்பு. கோயிலுக்கு கூரை அமைக்காதே. வானமே எல்லையாக இருக்கட்டும், என்றார். அதன்படி,
அவரைக் கண்டெடுத்த இடத்திலேயே கோயில் கட்டினார்.திருவனந்தபுரம் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பக்தர் களும், கரமனையைச் சேர்ந்தவர்களும் அவரவர்
வீட்டில் இருமுடி கட்டி, இந்தக் கோயிலுக்கு வந்து நெய் அபிஷேகம் செய்கின்றனர். இதை சபரிமலையாகவே கருதுகின்றனர்.
இங்குள்ள மூலவர் விமானம் சிலந்தி வலை போல கூம்பு வடிவில் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு. மலைநாட்டிலுள்ள திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என்று அழைத்தனர். இப்பகுதியை ஆண்ட கர மகாராஜா பல கோயில்களை கட்டினார். ஒருசமயம், காட்டு வழியே அவர் சென்று கொண்டிருந்த போது, சிலந்திகள் வலை பின்னிய ஒரு இடத்தில் சாஸ்தா சிலை கிடந்ததைக் கண்டார்.
அதை ஊருக்குள் கொண்டு சென்று கோயில் கட்ட முடிவு செய்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சாஸ்தா, என்னை ஊருக்குள் கொண்டு வர முயற்சிக்காதே. நான் கானகத்தில் இருப்பதையே விரும்புபவன். சிலந்திகள் வலை கட்டியிருக்கும் இடத்திலேயே கோயில் எழுப்பு. கோயிலுக்கு கூரை அமைக்காதே. வானமே எல்லையாக இருக்கட்டும், என்றார். அதன்படி, அவரைக் கண்டெடுத்த இடத்திலேயே கோயில் கட்டினார்.
திருவனந்தபுரம் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பக்தர் களும், கரமனையைச் சேர்ந்தவர்களும் அவரவர் வீட்டில் இருமுடி கட்டி, இந்தக் கோயிலுக்கு வந்து நெய் அபிஷேகம் செய்கின்றனர். இதை சபரிமலையாகவே கருதுகின்றனர். |