வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள எட்டு அடுக்கு கட்டடம் நொறுங்கி விழுந்ததில் 140 பேர் பலியாயினர் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாகாவில் ராணா பிளாசா என்ற பெயரில் எட்டு அடுக்கு வணிக வளாகக் கட்டடம் இயங்கி வந்தந்து. நேற்று முன்தினம், இந்த கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை இந்தக் கட்டடம் பலத்த சத்தத்துடன் திடீரென நொறுங்கி விழுந்தது. இந்த சம்பவத்தில் ஏராளமானவர்கள் புதையுண்டனர். இதுவரை 140 பேர் இறந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 800 பேர் தாகாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு துறையினரும், ராணுவத்தினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
|