LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலிப் பணியிடங்கள் !!

பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 1200 புரொபேஷனரி அதிகாரிப் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 17.03.2015 அடிப்படையில் 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 18.03.1987க்கு பின்னரும் 17.03.1995க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தற்போது இறுதித் தேர்வை எதிர்கொள்பவர்கள் 01.06.2015க்குள் தங்கள் பட்டப் படிப்பு சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியலைப் பெற்றுவிடும் பட்சத்தில் அவர்களும் இந்தப் படிப்புடனான வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-ஐ விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சார்ந்தவர்கள் ரூ.100/--மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்-லைன் தேர்வு பின்னர் குழுவிவாதம் மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். ஆன்-லைன் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் புதுச்சேரியில் எதிர்கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மணிப்பால் பல்கலைக் கழகத்துடன் இணைந்து படிப்புடன் கூடிய பணி வாய்ப்பு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.03.2015

இணையதள முகவரி: http://www.bankofbaroda.com/careers/Manipal.asp

by Swathi   on 08 Mar 2015  0 Comments
Tags: பாங்க் ஆப் பரோடா   பாங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு   பாங்க் ஆப் பரோடா காலிப்பணியிடங்கள்   Bank of Baroda   Bank of Baroda Requirements        
 தொடர்புடையவை-Related Articles
பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலிப் பணியிடங்கள் !! பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலிப் பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.