வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாகவும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.
வரும் காலங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளதக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்த ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவு ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்ரபர்தி தெரிவித்துள்ளார்.
|