LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கோவையிலும், ‘பேட்டரி பஸ்’ அறிமுகம் செய்ய போக்குவரத்து அதிகாரிகள் திட்டம்!

சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் பேட்டரி பஸ்சினை அறிமுகம் செய்ய, போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். 

 சென்னையில், தமிழகம் மட்டும் அல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் தங்கி, பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பணிக்குச் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்வோரில் பலரும் அரசு பஸ்களையே பயன்படுத்தி வருகின்றனர். அவை போதுமான அளவிற்கு பராமரிக்கப்படாததால், மோசமான நிலையில் உள்ளது. 

மேலும் சாலைகளில் இந்தபஸ்கள் இயக்கப்படும் போது, அதிலிருந்து வெளிவரும் புகை காற்றை மாசுபடுத்தி வருகிறது. இவ்விரண்டு பிரச்னைகளையும் தடுக்கும் வகையில், அரசு ஆலோசனை செய்தது. அதன்படி சென்னையில் ‘பேட்டரி பஸ்’ சேவை கொண்டுவரலாம் என முடிவு செய்யப்பட்டது.

 விரைவில் புதிய டெக்னாலஜி கொண்ட பஸ்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் சென்னையை தொடர்ந்து கோவைக்கு முதல்கட்டமாக, 20 பேட்டரி பஸ்களை இயக்க அதிகாரிகள் திட்டம் வகுத்து வருகின்றனர்.

சென்னையில் புதிய பஸ்கள் இயக்கத்திற்கு வரும் போதே, கோவையிலும் அறிமுகம் செய்து விடலாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதற்கட்ட வேலைகளில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணிகளும், ஓட்டுனர்களும் நிம்மதியடைந்து உள்ளனர். 

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் சென்னை, கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. அதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. அதை குறைக்கும் வகையில் ‘பேட்டரி பஸ்’களை இயக்க முடிவு செய்து உள்ளோம்.  அதன்படி சென்னையை தொடர்ந்து கோவையில், 20 பஸ்கள் இயக்கப்படும்’’ என்றனர்.

by Mani Bharathi   on 12 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.