ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பல கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டம் (ஸ்பாட் பிக்சிங்) நடைபெறுவதாக புகார் பதிவு செய்த டில்லி இன்ஸ்பெக்டர், தனது மனைவியுடன் மர்மமான முறையில் இறந்து உள்ளார். டில்லியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பத்ரிஷ் தத். இவர் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பெருமளவில் ஸ்பாட் பிக்சிங் நடைபெறுவதாக புகார் பதிவு செய்தார். புகார் பதிவு செய்த மறுநாள் ஆன மே 10ம் தேதி குர்கானில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் தனது மனைவியுடன் பிணமாக கிடந்துள்ளார். இந்த மர்ம சாவு குறித்து குர்கான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பத்ரிஷ் உடலில் குண்டு காயங்கள் இருந்த போதிலும் இதனை தற்கொலை என்றே போலீசார் கூறி வருகின்றனர்.
|