|
|||||
பதவியேற்கும் முன்பே கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த எம்.பி. எச். வசந்தகுமார்! |
|||||
எம்.பி. யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எச்.வசந்தகுமார் பதவியேற்கும் முன்பாகவே தொகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்து உள்ளார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி. யாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பவர், எச். வசந்தகுமார். வசந்த் அன் கோ மற்றும் வசந்த் தொலைக்காட்சியின் நிறுவனர். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் தான் எச். வசந்தகுமார். மக்களவைத் தேர்தல் வந்ததும் போட்டியிட்டு, எம்.பி. பதவிக்கும் வந்து விட்டார். இப்போது இவர் மேலும் சிறப்பான இன்னொரு பணியைச் செய்ய இருக்கிறார். அதற்காக ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிவிப்பில், தனது மாதச் சம்பளத்தை தொகுதி மக்களுக்காக செலவிடப் போகிறேன் என்றும், ஏழைகளுக்கும், கல்விக்காகவும் அதனைச் செலவிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.. வழக்கமாக தேர்தலில் வெல்வதற்காக மட்டுமே பணத்தை செலவிடுவார்கள். ஆனால் எச். வசந்தகுமாரோ வென்ற பிறகும் பணத்தைச் செலவிடத் தயாராகிறார். எம்.பி.யாகப் பதவியேற்பதற்கு முன்பாகவே, மக்களுக்காக தனது சம்பளத்தையே ஒதுக்குவதாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பையும், அந்தத் தொகையை கல்விக்காக ஒதுக்கியிருப்பதையும் வலைத்தமிழ் பெரிதும் பாராட்டி வரவேற்கின்றது. எச். வசந்தகுமார் தனது மாதச் சம்பளம் ரூ. 1 லட்சத்தை மக்களுக்காக ஒதுக்கியிருப்பது தொகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து உள்ளது. |
|||||
by on 04 Jun 2019 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|