LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

பிராணாயாமத்தின் பலன்கள்

“ஈஷா யோகாவில் கற்றுத்தரும் பிராணாயாமப் பயிற்சிகளுக்கும் மற்ற இடங்களில் கற்றுத்தரப்படும் பிராணாயாமப் பயிற்சிக்கும் என்ன வித்தியாசம்? பிராணாயாமம் பயிற்சி செய்வதால் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியுமா?” இந்தக் கேள்விகள் உங்களுக்கு இருந்தால் சத்குருவின் இந்த விளக்கம் தெளிவுபடுத்தும்!


சத்குரு:


ஒரு சூழ்நிலை நீங்கள் நினைத்தவாறு நடக்கவில்லை என்றால், உங்களை பதற்றமும், மன அழுத்தமும் தொற்றிக் கொள்கிறது. பதற்றம் அதிகரித்தால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து நோய் உண்டாகிறது.


இன்று மனிதர்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் 70% மனரீதியானவை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். வெறும் 30% நோய்களுக்கு மட்டுமே காரணி வெளியிலிருந்து வருகிறது. ஆக, மனதின் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் பல நோய்கள் உண்டாகிறது – அதாவது 70% நோய்கள் உள்ளிருந்தே உருவாகின்றன.


யோகப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் உடல் இயக்க அமைப்பு அமைதியாகவும் ஸ்திரமாகவும் செயல்படுகிறது. இதனால் மன அழுத்தம் என்ற பேச்சிற்கே இடமிருக்காது. சில வாரங்கள் பயிற்சி செய்வதிலேயே உங்கள் மனம் சமநிலையாக இருப்பதையும், உங்கள் உடல் திடமாக செயல்படுவதையும், நீங்கள் கவனிக்க முடியும்.


பிராணாயாமம் என்றால் என்ன?


‘பிராணா’ என்றால் உயிர்சக்தி. ‘யாமா’ என்றால் ஆதிக்கத்தில் வைத்துக் கொள்வது. ஈஷா யோகாவில் பிராணாயாமத்தை ‘சக்தி சலன க்ரியா’ என்று அழைக்கிறோம். அதாவது, உங்கள் சக்தியை நீங்கள் விரும்பும் விதத்தில் நகர்த்திக் கொள்ள உதவும் பயிற்சி.


உலகில் பெரும்பாலானவர்கள் பிராணாயாமத்தை புத்தகத்திலிருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டமானது. இது ஏனெனில், இவ்வுலகில் ஒரே ஒரு புத்தகம் மட்டும்தான் உங்களுக்கு சரியான பிராணாயாமத்தைக் கற்றுத்தர முடியும் – அது, உங்கள் உடல். உடல் என்பது உங்களை படைத்தவர் எழுதிய புத்தகம். இதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. இந்த உடல் எப்படி செயல்படுகிறது என்ற விழிப்புணர்வு இருந்தால் மட்டும் தான், பிராணாயாமப் பயிற்சியை வடிவமைக்க முடியும்.


யோகப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பவை சூத்திரங்கள் – இயக்கமுறை நுட்பங்கள். சூத்திரம் என்பது ஒரு நூல் – பூக்களைக் கோர்த்து ஒரு மாலையாகக் கட்டும் நூல். நீங்கள் ஒரு மாலையை அணிவது, அதில் உள்ள நூலுக்காக அல்ல; அதிலுள்ள மலர்களுக்காகத்தான். ஆனால் அந்த நூல் இல்லாமல் மாலை இல்லை. யோக சூத்திரங்களும் அது போலத்தான்.


ஒவ்வொரு ஆன்மீக குருவும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்ற மாலையை வடிவமைக்கிறார். உடனடித் தேவை என்னவோ, அதற்கு ஏற்ப எல்லோரையும் சேர்த்து, அவர் ஒரு மாலையைத் தொடுக்கிறார். இதில் பிரச்சினை என்னவென்றால் அடுத்து வருபவர்கள் நூலை மட்டுமே போதிக்கிறார்கள். அதைக் கொண்டு ஒரு மாலையை உருவாக்குவது பற்றிய புரிதல் அவர்களிடம் இல்லை. மாலையாக இல்லாமல், வெறும் நூலை அணிய யாருக்கும் விருப்பம் இருக்காதுதானே?

by Swathi   on 30 Mar 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.