LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சென்னை- மைசூரு இடையே புல்லட் ரயில்: மத்திய அரசு திட்டம்!

சென்னை - அரக்கோணம் - பெங்களூரு - மைசூரு நகரங்களை இணைக்கும் வகையில், புல்லட் ரயில் இயக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 

இதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரித்துள்ள ஜெர்மனி அரசு நிறுவனத்தால், 'இந்த திட்டத்துக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகும்' என, மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டப்படி, சென்னையில் இருந்து பெங்களூருக்கு, 100 நிமிடங்களில் செல்ல முடியும். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு, புல்லட் ரயில் இயக்கும் திட்டம், ஆசிய நாடான, ஜப்பானின் நிதிஉதவியுடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை - அரக்கோணம் - பெங்களூரு - மைசூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், புல்லட் ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை, ஐரோப்பிய நாடான, ஜெர்மனி தயாரித்து உள்ளது.

ரயில்வே துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள இந்த அறிக்கைபடி, 85 சதவீத புல்லட் ரயில் பாதை, தூண்கள் உதவியுடன், உயரத்தில் அமைக்கப்படும். 435 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாதையில், 11 இடங்களில், குகைகள் இடையே, புல்லட் ரயில் செல்லும்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், சென்னையில் இருந்து மைசூரை, 145 நிமிடங்களில் சென்று அடையலாம். எக்ஸ்பிரஸ் ரயிலில், இதற்கு தற்போது, ஒன்பது மணி நேரம் ஆகிறது. சென்னை - பெங்களூரு இடையிலான தூரத்தை, 100 நிமிடங்களில் அடையலாம் என, ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த  திட்டப்படி இயக்கப்படும், புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம், 320 கி.மீ., ஆக இருக்கும். புல்லட் ரயில் திட்டம், சென்னை - மைசூரு இடையிலான பயண நேரத்தை, மூன்றில் ஒரு பங்காக குறைக்கும்.

நாட்டில் தற்போது வழக்கத்தில் உள்ள பழைய ரயில் தடங்கள் அனைத்தையும், அதிவேக ரயில் பாதைகளாக மாற்ற வேண்டும்' என, ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 'இதற்கு, குறைந்த அளவு நிலம் கையகப்படுத்தினால் போதும்; செலவு கணிசமாக குறையும்' என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.