LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே ரூ. 208 கோடி செலவில் புதிய ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

ராமேஸ்வரம், தனுஷ்கோடியை இணைக்கும் வகையில் ரூ.208 கோடியில் ரயில்  பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

ராமேஸ்வரத்திற்கு வட இந்தியா உள்பட நாட்டின்  பல்வேறு பகுதியில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான இந்துக்கள் புனிதப் பயணமாக  வந்து ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்கின்றனர். 

இந்த நிலையில் கடந்த  1964ம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் சூறாவளி காரணமாக  தனுஷ்கோடி முற்றிலும் அழிந்து விட்டது. அங்கிருந்த ரயில் நிலையமும்  சேதமடைந்தது. இதனால் பிரபலமான சுற்றுலாத் தலமான தனுஷ்கோடியில் ஆள் நடமாட்டம்  இல்லாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு தமிழக  மக்களுக்கு புத்தாண்டு பரிசாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி இடையே அகல ரயில்பாதை  அமைக்க அனுமதி அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சுமார் 17 கிமீ  தூரத்துக்கு ரூ.208 கோடி செலவில் இந்த திட்டத்தை தற்போதைய நிதி ஆண்டிலேயே  தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ராமேஸ்வரம் வரும்  யாத்ரீகர்கள் தனுஷ்கோடி கடலில் புனிதநீராட முடியும். இதன் மூலம் அவர்களது  யாத்திரை முழுமையடையும். இந்த ரயில் பாதை அமைப்பதன் மூலம் அதிகப்படியான  பயணிகள்  ராமேஸ்வரத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே ராமேஸ்வரத்திற்கு அருகேயுள்ள 104 ஆண்டு பழமையான பாம்பன்  பாலத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.  

பழமையான பாம்பன் பாலத்திற்கு அருகே புதிய பாலம் ரூ.249 கோடி செலவில்  அமைக்கப்படுகிறது. இந்த புதிய பாலம் அமைப்பதன் மூலம் ராட்சத அலைகள்  எழும்போது கூட இந்த பாலம் செங்குத்தாக தூக்கப்பட்டு கப்பலுக்கு தானாகவே  வழிவிட முடியும். தனுஷ்கோடி-ராமேஸ்வரம் இடையே அமையும் புதிய ரயில்பாதையால்  இலங்கைக்கு கடல்வழிபாதை மீண்டும் புதுப்பிக்கப்படும் என நம்பப்படுகிறது

by Mani Bharathi   on 27 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.