LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

பக்தியில் தூய்மை

பின்னர் , 1975 ஆம் ஆண்டு என் கணவர் தூத்துக்குடி துறைமுகத்தில் செயல் பொறியாளராக ( Executive Engineer ) அலுவல் பார்க்கத் தொடங்கினார் . அப்போது உடல்நலம் நலிவுற்றவராக என் தந்தையார் எங்கள் வீட்டுக்கு வந்தார் .

அந்த நேரம் , திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாங்கள் அவரைக் கூட்டிச் சென்றோம் . சிறப்பு நுழைவுச் சீட்டு ( Speical Entrance Ticket ) வாங்கக்கூட அவர் எங்களை அனுமதிக்கவில்லை . சாதாரண பொதுமக்கள் வரிசையில் நின்றுதான் அந்தத்தமிழ்க் கடவுளை நாங்கள் தொழுதோம் .

முன்னர் என் தந்தையார் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர்தாம் . என்றாலும் , அந்தப் பதவியைவிட்டு விலகியபிறகு , தாமும் ஒரு சாதராரணக் குடிமகன்தான் என்று அவர் நினைத்து நடந்தார் . தம்மிடம் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிகார ஆணவம் இல்லாமல் , ஒரே சமவுரிமை நிலையில் வாழ்ந்து காட்டிய மனித தெய்வம் என்று எங்கள் தந்தையார் திரு . கக்கன் அவர்களை எம் நெஞ்சில் வைத்து வணங்கி வாழ்கிறோம் நாங்கள் .

தூத்துக்குடியில் பத்து நாள்கள் எங்களுடன் அவர் தங்கியிருந்ததை என் கணவரும் நானும் பெரும் பேறாக எண்ணி இன்றும் மகிழ்கிறோம் .

அந்தத் தங்கலுக்குப் பிறகு , என் தந்தையார் சென்னை திரும்பியபோது , என் கணவர் அவருக்கு இரயிலில் முதல் வகுப்பு ( First Class ) பயணச்சீட்டு எடுப்பதாகக் கூறினார் . அவரோ மறுத்துவிட்டார் . சாதாரணப் பொதுமக்களுக்கு உரிய மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ( Three Tier Coach ) செல்லவே பயணச்சீட்டு வாங்கி வரச் செய்து சென்னைக்குச் சென்றார் .

“பக்தியின் முதல்நிலை ஆணவத்தை அகற்றுதல் ஆரவாரத்தை அடக்குதல்” .

– வாரியார்

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.