மத்திய அரசு அறிவித்த டீசல் விலை உயர்வு மற்றும் சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பாக இன்று நாடு தழுவிய பந்த் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பந்திற்கு தமிழகத்தை சேர்ந்த திமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை பந்த்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினரும் பாரதிய ஜனதா கட்சியினரும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுவரை பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியாக முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் பெரும்பாலான கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
|