டைபாய்டு(Typhoid), காய்ச்சல் வராமல் தடுக்க கூடிய, புதிய மருந்தை, இந்திய நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
உலகிலேயே, இந்தியா,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான், டைபாய்டு(Typhoid) காய்ச்சலால், அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த காய்ச்சலை குணப்படுத்தவும், தடுக்கவும் மருந்துகள் இருந்த போதிலும், அந்த மருந்துகளை பெரும்பாலும், 2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு பயன்படுத்த முடியாது. மேலும், அந்த மருந்தின், நோய் தடுப்பு சக்தி, மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தான் இருக்கும். இந்நிலையில்,ஐதராபாத்தில் செயல்படும், "பாரத் பயோடெக் இன்டர்நேஷனல்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், டைபாய்டு(Typhoid) காய்ச்சலுக்கு, "டைப்பார் டி.சி.வி.,' (Typbar- TCV)என்ற புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை, இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கும் பயன்படுத்த முடியும். மருந்தின் நோய் தடுப்பு சக்தி, பத்து ஆண்டுகளுக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்தின் விலை 180 ருபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|