LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு!

பாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால், பின்னால் சேர்த்தாலோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதாக அறிந்தாலோ விருதுகள் பறிக்கப்படும் என்று மத்திய அரசு  அறிவித்து உள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்து மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் பேசியதாவது:

''குடிமக்களில் சிறப்பான சேவை செய்தவர்களுக்கு வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் ஆகிய தேசிய விருதுகளை அரசமைப்புச் சட்டம் 18(1)பிரிவின்படி, விருதைப் பெறுபவர்கள் தங்களின் பெயருக்கு முன்னும், பின்னும் பயன்படுத்தக் கூடாது.

அவ்வாறு பயன்படுத்தினாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோ விருது பெற்றவர்களிடம் இருந்து விருதை அரசிடம் திரும்ப ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். 

மேலும், தவறாகப் பயன்படுத்தியவர்களிடம் இருந்து விருதைப் பறிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. அவர்களின் பெயரையும் அரசின் பதிவேட்டில் இருந்து நீக்க முடியும்.

இந்த விருதைப் பெற்றுக் கொண்டவர்களிடம் இந்த விருது குறித்து பெயருக்கு முன்போ, பின்போ சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்படுவார்கள்.

கடந்த 1955-ம் ஆண்டில் இருந்து இதுவரை 38 பேருக்கு பாரத ரத்னா விருதும், 307 பேருக்குப் பத்ம விபூஷண் விருதும், 1,255 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 3 ஆயிரத்து 5 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு உள்ளது''.

இவ்வாறு ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்தார்.

by Mani Bharathi   on 15 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.