|
|||||
பாரத் பந்த் - ஊட்டி வெறிச்சோடியது |
|||||
ஊட்டி: தேசிய அளவில் நடந்த பந்துக்கு அனைத்து இடங்களிலும் ஆதரவு கிடைத்தது. கடைகள் அடைக்கப்பட்ட
போதிலும் சீரான நிலைமையே நிலவியது.பேருந்து இயங்கியதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.சில்லரை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீடு, சமையல் காஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு
உட்பட மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து, இடது சாரி உட்பட எதிர்கட்சிகள் நேற்று ஸ்டிரைக்
நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு, நீலகிரி மாவட்டத்தில் ஆதரவு இருந்தது.ஆட்டோ, தனியார் ஜீப், கார் உட்பட வாகனங்கள் இயங்காததால், நகர வீதிகள் வெறிச்சோடி இருந்தன.ஊட்டியில் மார்க்கெட், கமர்ஷியல் சாலை, மெயின் பஜார் உட்பட அனைத்து இடங்கள், குன்னூர் பெட்போர்டு, மார்க்கெட் உட்பட அனைத்து இடங்கள், மஞ்சூர் நகர்புறங்களில் கடை, ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து நீலகிரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், "" 100 கடைகள் அடைத்திருக்கும் போது ஒரு கடை மட்டும் திறந்திருந்தால், அந்த கடைக்கு லாபம் அதிகம்; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடால், முதலில் பாதிக்கப்படுவது சில்லரை
கடைகள் தான். இதை உணராமல், எந்த நோக்கத்திற்காக, யாருக்காக ஸ்டிரைக் நடத்தப்படுகிறது என்பதை புரிந்தும்,
அதன் விபரீதத்தை உணராமல் கடைகளை திறந்து வியாபாரம் செய்வது துரோகச் செயலாகும்,'' என்றார்.
ஊட்டி: தேசிய அளவில் நடந்த பந்துக்கு அனைத்து இடங்களிலும் ஆதரவு கிடைத்தது. கடைகள் அடைக்கப்பட்ட போதிலும் சீரான நிலைமையே நிலவியது.பேருந்து இயங்கியதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.சில்லரை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீடு, சமையல் காஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு உட்பட மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து, இடது சாரி உட்பட எதிர்கட்சிகள் நேற்று ஸ்டிரைக் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு, நீலகிரி மாவட்டத்தில் ஆதரவு இருந்தது.ஆட்டோ, தனியார் ஜீப், கார் உட்பட வாகனங்கள் இயங்காததால், நகர வீதிகள் வெறிச்சோடி இருந்தன.ஊட்டியில் மார்க்கெட், கமர்ஷியல் சாலை, மெயின் பஜார் உட்பட அனைத்து இடங்கள், குன்னூர் பெட்போர்டு, மார்க்கெட் உட்பட அனைத்து இடங்கள், மஞ்சூர் நகர்புறங்களில் கடை, ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து நீலகிரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், "" 100 கடைகள் அடைத்திருக்கும் போது ஒரு கடை மட்டும் திறந்திருந்தால், அந்த கடைக்கு லாபம் அதிகம்; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடால், முதலில் பாதிக்கப்படுவது சில்லரை கடைகள் தான். இதை உணராமல், எந்த நோக்கத்திற்காக, யாருக்காக ஸ்டிரைக் நடத்தப்படுகிறது என்பதை புரிந்தும், அதன் விபரீதத்தை உணராமல் கடைகளை திறந்து வியாபாரம் செய்வது துரோகச் செயலாகும்,'' என்றார். |
|||||
by Swathi on 21 Sep 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|