LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா

-பிரசாத் பாண்டியன்

அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில் டிசம்பர் 08, 2018, சனிக்கிழமையன்று நண்பகல் 12:30 மணி முதல் நடைபெற்ற "மகாகவி பாரதியாரின்" 137வது பிறந்தநாளில் டெலவர், பென்சிலவேனியா மற்றும் நியூ செர்சியை சேர்ந்த தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

செல்வி. கண்மணி துரைக்கண்ணன் விழாவினை ஒருங்கிணைக்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. திருமிகு.மெர்லின் தீபன் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து சிறுவர்களுக்கான ஓவியப்போட்டி இருபிரிவாக நடைபெற்றது. 7 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும், 8 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும் கலந்து கொண்டு பாரதியாரின் படத்தை வரைந்து வந்திருந்த மக்களை வியப்பிற்குள்ளாக்கினர். 7 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டியில் ஜெசிகா ரேபன் முதலிடத்தையும், திரிபுவன் இரண்டாம் இடத்தையும், அகஷத் பிரம் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.  7 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டியில் சுபிக்‌ஷா ஶ்ரீநிவாசன் வித்யா முதலிடத்தையும், அறிவாற்றல் இராஜ்குமார் இரண்டாம் இடத்தையும், கெளதம் ராஜ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

சிறுவர்களுக்கான வினாடி வினா போட்டியை திருமிகு. ராஜ்குமார் கலியபெருமாள் இனிமையாக நடத்தினார். குழுவிற்கு பாரதியார் பணியாற்றிய சுதேசிமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா மற்றும் சூரியோதயம் என்ற இதழ்களின் பெயர்கள் சூட்டப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. நான்கு குழுவினர் கலந்து கொண்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி நடுவர்களையே கலங்கடித்தனர். 5 சுற்றில் முடியவேண்டிய போட்டி 29வது சுற்றிலும் நிறைவடையாமல் முதல் இடத்திற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் முதல் பரிசை சக்கரவர்த்தினி அணியை சேர்ந்த.பிரத்யூஷ் மற்றும் இந்தியா அணியை சேர்ந்த யதுராஜ் சுந்தர்ராஜ் மற்றும் செல்வன். வேணு தனபால் பகிர்ந்து கொண்டனர். மூன்றாம் இடத்தை அறிவாற்றல் மற்றும் ஆதித் வென்றனர்.

விழாக்குழுவில் ஒருவரான திருமிகு.பிரசாத் பாண்டியன் தரவுகள் மற்றும் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் வினாடி வினாவின் கேள்விகள் தயாரிக்க விழாக்குழு எடுத்த முயற்சியை எடுத்துக் கூறினார்.

பின்னர் பெரியவர்களுக்காக நடந்த பேச்சுப்போட்டியில் பலர் கலந்து கொண்டு "பாரதியாரின் சிந்தனைகளை" பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினார்கள். விழாவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிக்கு திருமிகு.அகத்தியன் ஜான் பெனடிக்ட் மற்றும் முனைவர். வாசு அரங்கநாதன்  இருவரும் நடுவர்களாக இருந்து விழாவை சிறப்பித்துக் கொடுத்தனர்.  அதில் முதல் பரிசைத் தட்டிச்சென்றார் திருமிகு. ரம்யா கார்த்திகேயன்.  திருமிகு. விஜயலட்சுமி ராமசுப்பிரமணியம் மற்றும் திருமிகு. தேவனாதன் தனபால் அருமையாகப் பேசி இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசை தட்டிச்சென்றனர்.

அதன் பிறகு திருமிகு. தீபன் அவர்கள் பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி பற்றி அழகான கவிதையை பாடிச் சிறப்பித்தார்.

திருமிகு. பிரசாத் அவர்கள், பாரதியார் பற்றி அறியாத பல நுண்ணிய தகவல்களை அரங்கத்தில் எடுத்துரைத்து வந்தோரை வியப்பில் ஆழ்த்தினார்.

விழாவில் சிறப்பு விருந்தினரில் ஒருவரான திரு.வாசு அரங்கநாதன், “பாரதியார் கவிதைகளின் உலகளாவிய ஈர்ப்பு” என்ற தலைப்பில் மிக அருகையாக பல தகவல்களைக் கூறினார்.

விழாவின் மற்றொரு சிறப்பு விருந்தினரான திருமிகு. அகத்தியன் ஜான் பெனடிக்ட், “பாரதியார் - நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா” என்ற தலைப்பில் பாரதியாரின் விடுதலை எழுச்சி பாடல்கள், தமிழ் பாடல்களின் கருத்துகளை கவிதையுடன் சேர்ந்து பேசி பாரதியாரின் புகழை போற்றினார்.

விழாக்குழுவில் ஒருவரான  திரு.துரைக்கண்ணன் நன்றியுரை வழங்கினார்.

விழா முடிவில் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது.

 

by Swathi   on 13 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.