|
||||||||
புவனேஷ்வரம் வந்த புனிதர் |
||||||||
ஒரு மதப் பிரசாரம் செய்பவர் பல இடங்களுக்கு சென்று கவர்ச்சிகரமாகப்பேசக் கூடியவர் . ஒரு சமயம் கூட்டத்தில் அரிச்சந்திரன் கதையை மிக மிக உருக்கமாகச் சொல்லிக்கொண்டு இருந்தார் . பொய் சொன்னால் நாடு , செல்வம்திரும்பக் கிடைக்கும் என்றாலும் வாய்மை காத்த திறனைச்சொன்னார் . இதனால் மனைவி அடிமையானாள் . மகன்லோகிதாசன் பாம்பு கடித்து இறந்தான் என்பதையும் கேட்பவர் கண்கலங்க பிரச்சாரம் செய்தார் . பிறகு தன் பேச்சால் மக்கள் எந்த அளவு நீதியை உணர்ந்து கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள கூட்டத்தில் ஒருவரை அழைத்து , இந்தக் கதை மூலம் நீங்கள் அறிந்து கொண்டது என்ன ? என்றார் . ஐயா உண்மை பேசினால் ரொம்ப , ரொம்ப கஷ்டப்படணும்னு தெரியுது என்றார் . பேச்சாளர் இடிந்து போய் அடுத்தவரிடம்கேட்டார் . அந்த ஆள் , ஐயா வாழ்க்கையிலே ஒரு கஷ்டம் வந்தா அவசரத்துக்கு மனைவியை அடகு வைக்கலாம்னு தெரிஞ்சுகிட்டேன் என்றார் . இதுதான் பொதுவாக மக்கள் நிலை . ஆனால் இப்படிப்பட்டவர்களையும் தனது எளிமையான சொற்பொழிவால் கவர்ந்து கருத்துக்களை அவர்கள் மனதில் சரியாகப் பதிய வைத்தவர் பெருந்தலைவர் . “ காந்தியடிகள் தலைமையில் விடுதலை பெற்று 17 ஆண்டுகளாகி விட்டன . சுதந்திரம் பெற்றால் வசதியாக எல்லோரும் வாழலாம் என்று அன்று காந்தி கூறினார் . ஆனால்இப்போது மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றிக் கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்தும் ஏழை மக்கள் நலமடையவில்லை . உணவு , உடை , வீடு போன்ற அடிப்படை வசதி கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர் . நிறைந்த செல்வங்களும் , திட்டங்களின் பலன்களும் கடலில் கலந்து விட்டதா ? அல்லது ஆவியாகி வானத்துக்குப்போய் விட்டதா ? இல்லை . அது இங்கே ஒரு சிலரிடம் மட்டும் குவிந்து கிடக்கிறது . அதை எடுத்து அனைவருக்கும் சமமாக விநியோகிக்க வேண்டும் . இந்தியர் அனைவருக்கும் உணவு , உடை , வீடு , கல்வி , சமவாய்ப்பு இவற்றை அளிப்பதே காங்கிரஸின் லட்சியம் . இதற்காக ஒரு திட்டம் வகுத்து இதற்கு மக்கள் ஆதரவைப்பெறவே புவனேஷ்வரம் செல்கிறோம் . அதற்கு உங்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை .” இப்படி சுருக்கமாகவும் , திட்டவட்டமாகவும் காமராசர்பேசினார் . எல்லா இடங்களிலும் சமதர்ம சமுதாயம் அமைப்பது பற்றியே பேசினார் . ஆந்திர மக்கள் அமைதியுடனும் , ஆர்வத்துடனும் கேட்டனர் . தலைவர் காமராசரை ஒரிசாவின் முன்னாள் முதல் மந்திரியும் வரவேற்புக் கமிட்டித் தலைவருமான பட்நாயக்கும் , ஒரிசா முதல்வர் பிரேன் மித்ராவும் , ஒரிசா காங்கிரஸ் தலைவர் பிஜய் பாணியும் , லால்பகதூர் சாஸ்திரியும் வரவேற்று வெளியே அழைத்து வந்தனர் . ரெயில் நியைத்திற்கு எதிரே இருந்த மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள்பெருந்தலைவரைப் பார்க்கக் கூடியிருந்தனர் . காமராசரைக் கண்டதும் , காமராஜ் நாடார் கி ஜே என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது . தலைவர் காமராசும் பட்நாய்க்கும் , பிரேன்மித்ராவும ஒரு திறந்த காரில் ஊர்வலமாகச் சென்றனர் . 1,500 சேவா தளத் தொண்டர்கள் காருக்குப் பின்னால் அணி வகுத்துச் சென்றனர் . |
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|