|
|||||
இடைத்தேர்தல் வேட்பாளரை அமைச்சராக்கக் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு |
|||||
இடைத்தேர்தல் வேட்பாளரை அமைச்சராக்கக் கூடாது: தேர்தல் ஆணையம்
பனாஜி, மே 4: தேர்தல் ஆணையத்துக்கும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது. இடைத்தேர்தல் வேட்பாளரை அமைச்சராக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது.
மே 8-ம் தேதி விரிவுபடுத்த உள்ள அமைச்சரவையில் அலினா சல்தானாவை சேர்க்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கோவா மாநிலத்தில் ஜூன் 2-ம் தேதி கோர்டாலிம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக அலினா சல்தானா நிறுத்தப்படக்கூடும் எனத் தெரிகிறது. இந்நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டால், அது சரியாக இருக்காது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில தேர்தல் அதிகாரி தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதோடு, அமைச்சராக அலினாவை சேர்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் சுற்றுலா அமைச்சர் மதன்ஹி சல்தானாவின் மனைவிதான் அலினா சல்தானா. இவரது கணவர் இறந்ததால் கோர்டாலிம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அமைச்சரவையில் சேர்க்கப்படும் உறுப்பினர் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டால், அத்தொகுதி தேர்தல் முறையாக நடைபெறாது என்று தான் கருதுவதாக தேர்தல் அதிகாரி எஸ். குமாரசுவாமி தலைமைச் செயலர் சஞ்சய் ஸ்ரீவாத்ஸவாவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னையை அரசிடம் தெரிவித்து இடைத் தேர்தல் முடியும் வரை அமைச்சரவையில் சேர்க்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஏரிஸ் ரோட்ரிக்ஸ், தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அலினாவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் மனோகர் பாரிக்கர், தனது அமைச்சரவையில் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வதற்கு அரசியல் சாசனம் தனக்கு அதிகாரம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவ்விதம் தேர்ந்தெடுக்கப்படும் நபர் ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. அரசியல் சாசனம் முக்கியமா அல்லது தேர்தல் நடத்தை விதிகள் முக்கியமா என்பதுதான் இப்போதுள்ள பிரச்னை. ஆனால் தேர்தல் நடத்தை விதிகளுக்கு சட்ட பூர்வ ஆவணம் கிடையாது என்று குறிப்பிட்டார்.
சல்தானாவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதால் வாக்காளர்களை அவர் அதிகம் கவர்வார் என்று கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அவர்கள் வாக்காளர்களைக் கவர முயற்சிப்பது இயல்புதானே என்று கேள்வியெழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின்படி அமைச்சராக இருப்பவர், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பதுதான் முக்கியம் என்றார் மனோகர் பாரிக்கார்.
இடைத்தேர்தல் வேட்பாளரை அமைச்சராக்கக் கூடாது: தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையத்துக்கும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது. இடைத்தேர்தல் வேட்பாளரை அமைச்சராக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது.மே 8-ம் தேதி விரிவுபடுத்த உள்ள அமைச்சரவையில் அலினா சல்தானாவை சேர்க்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கோவா மாநிலத்தில் ஜூன் 2-ம் தேதி கோர்டாலிம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக அலினா சல்தானா நிறுத்தப்படக்கூடும் எனத் தெரிகிறது. இந்நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டால், அது சரியாக இருக்காது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில தேர்தல் அதிகாரி தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதோடு, அமைச்சராக அலினாவை சேர்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.முன்னாள் சுற்றுலா அமைச்சர் மதன்ஹி சல்தானாவின் மனைவிதான் அலினா சல்தானா.
இவரது கணவர் இறந்ததால் கோர்டாலிம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.அமைச்சரவையில் சேர்க்கப்படும் உறுப்பினர் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டால், அத்தொகுதி தேர்தல் முறையாக நடைபெறாது என்று தான் கருதுவதாக தேர்தல் அதிகாரி எஸ். குமாரசுவாமி தலைமைச் செயலர் சஞ்சய் ஸ்ரீவாத்ஸவாவிடம் தெரிவித்துள்ளார்.இந்த பிரச்னையை அரசிடம் தெரிவித்து இடைத் தேர்தல் முடியும் வரை அமைச்சரவையில் சேர்க்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஏரிஸ் ரோட்ரிக்ஸ், தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அலினாவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் மனோகர் பாரிக்கர், தனது அமைச்சரவையில் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வதற்கு அரசியல் சாசனம் தனக்கு அதிகாரம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவ்விதம் தேர்ந்தெடுக்கப்படும் நபர் ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.
அரசியல் சாசனம் முக்கியமா அல்லது தேர்தல் நடத்தை விதிகள் முக்கியமா என்பதுதான் இப்போதுள்ள பிரச்னை. ஆனால் தேர்தல் நடத்தை விதிகளுக்கு சட்ட பூர்வ ஆவணம் கிடையாது என்று குறிப்பிட்டார்.சல்தானாவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதால் வாக்காளர்களை அவர் அதிகம் கவர்வார் என்று கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அவர்கள் வாக்காளர்களைக் கவர முயற்சிப்பது இயல்புதானே என்று கேள்வியெழுப்பினார்.தேர்தல் ஆணையத்தின்படி அமைச்சராக இருப்பவர், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பதுதான் முக்கியம் என்றார் மனோகர் பாரிக்கார். |
|||||
by Partha on 09 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|