LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!

வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள், திருமணத்திற்குப் பிறகு கொடுமைப்படுத்தியதாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான பெண்கள் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் இது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு சுமார் 4,300 புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய மசோதாவை மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவின்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பெண்ணை திருமணம் செய்தால் திருமணமாகி 30 நாட்களுக்குள் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்களின் பாஸ்போர்ட் திரும்ப பெறப்படும் என கூறப்பட்டு உள்ளது. 

இந்த புதிய மசோதாவின்படி, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 ல் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி நீதிமன்றங்கள் இந்திய வெளியுறவுத் துறையின் இணைய தளத்தின் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சம்மன் அனுப்பலாம், சம்மனிற்கு ஆஜர் ஆகாதவர்களின் சொத்துகளையும் முடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாத வெளிநாடு வாழ் இந்தியரை குற்றவாளியாகவும் அறிவிக்கலாம் என இந்த மசோதாவில் குறிப்பிட்டு உள்ளனர்.  இந்த மசோதாவை வெளியுறவுத் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு, சட்ட அமைச்சகங்கள் கூட்டு முயற்சியாக உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இது குறித்து தகவல் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்த மசோதா வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமண புகார்களுக்கு தக்க பதிலாக அமையும் என்றும், இதன்மூலம் பெண்கள் தங்களின் வெளிநாடு வாழ் கணவர்களால் சந்திக்கும் இன்னல்கள் குறையும் என்றும் தெரிவித்து உள்ளது.

by Mani Bharathi   on 12 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.