LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக எஸ்.சி.சின்ஹா நியமனம் !

 

தற்போது மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக இருந்த சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் பி.சி.சர்மாவின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, அப்பதவியில் தேசிய புலனாய்வு அமைப்பின் 
தலைவர் எஸ்.சி.சின்ஹாவை மத்திய அரசு நியமித்துள்ளது. 
தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை தலைவர் மீரா குமார், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், மத்திய 
உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது 
தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.சி.சின்ஹாவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதிய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜும், அருண் ஜேட்லியும் இது 
தொடர்பாக பிரதமருக்கு கடிதம் அளித்துள்ளனர். சுஷ்மா ஸ்வராஜ் தனது கடிதத்தில், "பெரும்பாலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாவதாகவும். எனவே, 
மனித உரிமை ஆணையத்துக்கு சமூக ஆர்வலர்களை நியமிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார். இதை நிராகரித்த பிரதமர் உள்ளிட்ட மற்ற உறுப்பினர்கள், எஸ்.சி. சின்ஹாவை உறுப்பினராக 
நியமிக்கும் முடிவை ஆதரித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, எஸ்.சி. சின்ஹாவை மனித உரிமை ஆணைய உறுப்பினராக நியமிப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 
ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக இருந்த சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் பி.சி.சர்மாவின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, அப்பதவியில் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் எஸ்.சி.சின்ஹாவை மத்திய அரசு நியமித்துள்ளது. 

தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை தலைவர் மீரா குமார், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.சி.சின்ஹாவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதிய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜும், அருண் ஜேட்லியும் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் அளித்துள்ளனர். சுஷ்மா ஸ்வராஜ் தனது கடிதத்தில், "பெரும்பாலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு ஆளாவதாகவும். எனவே, மனித உரிமை ஆணையத்துக்கு சமூக ஆர்வலர்களை நியமிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார். இதை நிராகரித்த பிரதமர் உள்ளிட்ட மற்ற உறுப்பினர்கள், எஸ்.சி. சின்ஹாவை உறுப்பினராக நியமிக்கும் முடிவை ஆதரித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, எஸ்.சி. சின்ஹாவை மனித உரிமை ஆணைய உறுப்பினராக நியமிப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

by Swathi   on 06 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.