LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க போகும் அமெரிக்க வாழ் இந்தியர் !!

அமெரிக்காவில் வரும் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியரான பாபி ஜிண்டால் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராக பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம் வரும் 2016ம் ஆண்டுடன் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து, நடைபெறும் அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியரான பாபி ஜிண்டால் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. தற்போதைய எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் முக்கிய தலைவரும், லூசியானா மாகாண கவர்னருமாக ஜிண்டால் உள்ளார். இவர் இரண்டாவது முறையாக கவர்னர் பதவி வகிப்பதால், அமெரிக்க சட்டப்படி மீண்டும் ஒருமுறை கவர்னர் பதவிக்கு போட்டியிட முடியாது.

 

எனவே, அதிபர் பதவிக்கு ஜிண்டால் போட்டியிட வாய்ப்பிருப்பதாக குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் டேவிட் விட்டர் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு டேவிட் விட்டர் அளித்த பேட்டியில், பாபி ஜிண்டால் ஒரு மதிக்கத்தக்க மனிதர். திறமையானவர். அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என நானும் கருதுகிறேன். அதிபர் ஆவதற்கான அனைத்து அரசியல் தகுதிகளும் ஜிண்டாலுக்கு உண்டு. போட்டியிட்டால் அவர் அதிபர் ஆவார் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு என அவர் கூறியுள்ளார்.

by Swathi   on 23 Dec 2013  0 Comments
Tags: பாபி ஜிண்டால்   அமெரிக்க அதிபர் பாபி ஜிண்டால்   2016 அமெரிக்க அதிபர் தேர்தல்   அமெரிக்க வாழ் இந்தியர்   Bobby Jindal   US President in 2016   Bobby Jindal 2016  
 தொடர்புடையவை-Related Articles
2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க போகும் அமெரிக்க வாழ் இந்தியர் !! 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க போகும் அமெரிக்க வாழ் இந்தியர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.