நேற்று அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 23 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டி முடியும் தருவாயில் பாஸ்டன் நகர் ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே மூன்று தொடர் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள் மேலும் 141 பேர் வரை காயமாடைந்திருக்கலாம் என பாஸ்டன் நகர போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அமெரிக்கா முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாஸ்டன் நகரின் மேல் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகள் செல்போன் மூலமும் குண்டுவெடிக்க செய்யலாம் என்பதால், செல்போன் சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.
|