LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- தாய்பால் (Breastfeeding)

தாய்ப்பாலே குழந்தைக்கு அரு மருந்து

தாய்ப்பாலே குழந்தைக்கு அரு மருந்து

                             பா. இராஜவேல், விருதுநகர், தமிழ்நாடு


 இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு 2 வயதுக்கு பிறகும் தாய்ப்பால் கொடுத்து வந்த காலம்போய், இப்போது 6 மாதம் வரையிலாவது கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று விளம்பரப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பது வேதனைக்குறிய ஒரு செய்தி...

 குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தர வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால், பிறந்த இரண்டு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும். அவ்வாறு இந்த குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கும் முதல் பாலில்தான் (சீம்பால்) குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த சீம்பால் தொடர்ந்து மூன்று நாள்கள் வரை சுரக்கும், அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.  சீம்பால் குழந்தைகளுக்கு இயற்கை தந்த அரு மருந்து. எனவே ஒரு துளி கூட விணாக்காமல் சீம்பால் தர வேண்டும்.


 இவ்வாறு எப்படித்தான் பால் புகட்டி வளர்த்தாலும் குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரங்களுக்கு, பிறந்த போது இருந்த எடையைக் காட்டிலும் குறையத்தான் செய்யும். ஆனால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மூன்றாம் வாரத்தில் இருந்து எடை கூட ஆரம்பிக்கும். சராசரியாக ஒரு தாய்க்கு குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு 750 மில்லி லிட்டர் வரை பால் சுரக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே முதல் 6 மாதங்களுக்கு ஒரு தாய் தனது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 12 முறை இரவு, பகல் என்று பாராமல் அதாவது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தாய்ப்பால் தர வேண்டும். எடை குறைவாகப் பிறந்த குழந்தை என்றால் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு முறை தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். இதனால் நல்ல ஆரோக்கியமான கொளு,கொளு குழந்தையாக நாம் வளர்க்க முடியும்.


 ஆனால் அதன் பின்பு இணை உணவுகளை கொடுக்க ஆரம்பித்த பிறகும் 2 வயது வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மிக்க நல்லது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி முதல் இரண்டு வருடங்களில் மிக வேகமாக இருக்கும்.
 
தாய்க்கும் ஆரோக்கியம்: இவ்வாறு தொடர்ந்து ஆறு மாதத்துக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கு மார்பகப் புற்றுநோயிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கிறது. இது தவிர பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கும் பட்சத்தில் உதிர போக்கு (ரத்த போக்கு) குறையும். மேலும் தொடர்ந்து 6 மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பதால் மாதவிடாய் காலமும் தள்ளிப்போகும். இதன் மூலம் குறுகியகாலத்தில் அடுத்த பிரசவத்தை தடுக்க முடியும்.
 
வேலைக்கு செல்லும் தாய்: தாய்ப்பாலே குழந்தைக்கு அரு மருந்து. வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பாலை எடுத்து சேமித்து பின்பு தரலாம். தாயப்பாலை சாதாரண அறை வெப்ப நிலையில் எட்டு முதல் பத்து மணி நேரம் வைக்கலாம். குளிர் பதன பெட்டியில் 24 மணி நேரமும், அதனுள் உள்ள ப்ரீசரில் (-20 டிகிரி செல்சியஸ்) மூன்று மாதங்கள் வரை தாய்ப்பாலை கெடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். எனவே வேலைக்கு செல்லும் தாய்மார்கள் இதையே கார ணமாகச் சொல்லி குழந்தைகளுக்கு தாய்ப்பால் தராமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இது போன்ற சிக்கலை தீர்க்கவே இப்போது இந்தியாவில் அரசு பணிக்கு செல்லும் பெண்களுக்கு குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு மருத்துவ விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியார் துறைகளிலும் இதை பின்பற்ற வேண்டும் என்று அரசுக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிர்ச்சி அறிக்கை: யுனிசெப் நிறுவனம் உலகம் முழுவதும் ஆய்வு நடத்தி, உலக குழந்தைகள் அறிக்கை - 2011 வெளியிட்டது. இந்த அரிக்கையின்படி, உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 13.67 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 32.6 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே தொடர்ந்து ஆறு மாதம் தொடர்ந்து தாய்ப்பால் வழங்கப்படுகிறது என தெரிய வந்துள்ளது. தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். குழந்தை மரணங்களும் தாய்ப்பால் தருவதால் தவிர்க்கப்படுகிறது. ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது அவசியம். குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான பிணைப்பு தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகரிக்கிறது.

 கர்ப்ப காலத்திலேயே, கர்ப்பிணியின் தாய் இது குறித்து தனது மகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். ஒரு தாய் ஒரு கருத்தை எடுத்துக் கூறுவதன் மூலம் கண்டிப்பாக 95 சதவீதத்குக்கும் மேற்பட்ட பெண்கள் கடைப்பிடிப்பார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் கொடுப்போம். இரண்டு வயது வரை இணை உணவுடன் தாய்ப்பாலையும் புகட்டுவோம் என்று ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் உலகத் தாய்ப்பால் வார விழாவில் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.  

Breast feeding is the best medicine

Breast feeding is the best medicine for babies.  They will be very healthy and more immunization and Nutrition. Doctors advices mothers to breastfeed for 2 years after baby born. But feeding mimimum 6 months is the best for kids and for their future health. As per 2011 UNICEF report, only 32.6% kids are getting breast feed out of 13.67 crore babies born in a year. 

by Swathi   on 04 Aug 2012  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..? கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?
கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !! கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!
கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !! கர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி !!
குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர் குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்
இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர் இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்?  ஹீலர் பாஸ்கர் தாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்? ஹீலர் பாஸ்கர்
கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு... கர்ப்பிணிகளின் கனிவான கவனத்திற்கு...
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !! மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.