|
|||||
புருனே நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது : இனி கொலை செய்தாலோ, விபச்சாரம் செய்தாலோ கல்லால் அடித்து மரண தண்டனைதான் !!! |
|||||
புருனே நாட்டில், இஸ்லாமிய சட்டங்கள் கடுமையக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் தற்போதைய மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியா அறிவித்துள்ளார்.
சீனாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே, போர்னியோ தீவில் அமைந்துள்ள நாடு புருனே. கடந்த 1984ல், பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்றது. புருனேவில், தற்போது 70 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு, படிப்படியாக, இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட போதிலும், கடந்த, 1996ம் ஆண்டுகளில் தான், இஸ்லாமிய சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. தற்போது, இஸ்லாமிய சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படுவதாக, சுல்தான் ஹசனல் போல்கியா தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தின் படி,
விபச்சாரம், கொலை போன்ற பெரிய குற்றங்களுக்கு, கல்லால் அடித்து மரண தண்டனை வழங்குதல்,
திருட்டு குற்றங்களுக்கு கைகளை முறித்தல்,
கருக்கலைப்பு, மது அருந்துதல் போன்ற குற்றங்களுக்கு சவுக்கடி வழங்குதல் போன்ற கொடுமையான தண்டனை வழங்கப்படும்.
இந்த தண்டனைகள் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவித்துள்ள சுல்தான் ஹசனல் , அல்லாவின் கருணையால் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டு அவருக்குரிய கடமைகள் நிறைவேற்றப்படுகின்றன என தெரிவித்துள்ளார். |
|||||
by Swathi on 22 Oct 2013 0 Comments | |||||
Tags: விபச்சாரம் கொலை மரண தண்டனை இஸ்லாமிய சட்டம் புருனே நாடு Bruneis Sultan | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|