LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

புருனே நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது : இனி கொலை செய்தாலோ, விபச்சாரம் செய்தாலோ கல்லால் அடித்து மரண தண்டனைதான் !!!

புருனே நாட்டில், இஸ்லாமிய சட்டங்கள் கடுமையக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் தற்போதைய மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியா அறிவித்துள்ளார். 

 

சீனாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே, போர்னியோ தீவில் அமைந்துள்ள நாடு புருனே. கடந்த 1984ல், பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்றது. புருனேவில், தற்போது 70 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு, படிப்படியாக, இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட போதிலும், கடந்த, 1996ம் ஆண்டுகளில் தான், இஸ்லாமிய சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. தற்போது, இஸ்லாமிய சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படுவதாக, சுல்தான் ஹசனல் போல்கியா தெரிவித்துள்ளார். 

 

இந்த சட்டத்தின் படி, 

 

விபச்சாரம், கொலை போன்ற பெரிய குற்றங்களுக்கு, கல்லால் அடித்து மரண தண்டனை வழங்குதல், 

 

திருட்டு குற்றங்களுக்கு கைகளை முறித்தல், 

 

கருக்கலைப்பு, மது அருந்துதல் போன்ற குற்றங்களுக்கு சவுக்கடி வழங்குதல் போன்ற கொடுமையான தண்டனை வழங்கப்படும்.

 

இந்த தண்டனைகள் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவித்துள்ள சுல்தான் ஹசனல் , அல்லாவின் கருணையால் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டு அவருக்குரிய கடமைகள் நிறைவேற்றப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

by Swathi   on 22 Oct 2013  0 Comments
Tags: விபச்சாரம்   கொலை   மரண தண்டனை   இஸ்லாமிய சட்டம்   புருனே நாடு   Bruneis   Sultan  
 தொடர்புடையவை-Related Articles
கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை - நிர்மலா ராகவன் கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை - நிர்மலா ராகவன்
சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு !! சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு !!
பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் !! பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் !!
புருனே நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது : இனி கொலை செய்தாலோ, விபச்சாரம் செய்தாலோ கல்லால் அடித்து மரண தண்டனைதான் !!! புருனே நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது : இனி கொலை செய்தாலோ, விபச்சாரம் செய்தாலோ கல்லால் அடித்து மரண தண்டனைதான் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.