நாட்டிலேயே, பெரிய, பிரம்மாண்டமான, தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலத்தை ஐதராபாத்தில், அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று டெல்லியில் நடை பெற்றது. இதில், ஐதராபாத்தில், பிரமாண்டமான தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் அமைக்க, ஒப்புதல் வழங்கப்பட்டது. தனியார் பங்களிப்புடன், செயல்படுத்தப்படும் இந்த புதிய தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலத்திற்கு, தேவையான வசதிகளை, மத்திய சாலை போக்குவரத்து, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ரயில்வே அமைச்சகங்கள் செய்து தர உள்ளன. சுமார் 2.20 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் இந்த புதிய தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலத்தின் மூலம், 15 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 56 லட்சம் பேருக்கு, மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தத் திட்டம், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் முடிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
|