LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் !

உணவு பாதுகாப்பு மசோதாவை அமல் படுத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டத்தின் படி ஏழைகள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் அரிசி, கோதுமை, உணவு தானியங்கள் ஆகியவை மலிவு விலையில் வழங்கப்படும். இதற்கான மசோதாவை கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்தது. ஆனால், தொடர் அமளி காரணமாக மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்தி மசோதாவை நிறைவேற்ற அரசு மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.இதைதொடர்ந்து உணவு பாதுகாப்பு அவசர சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்தது. அவசர சட்டத்துக்கு, டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, ஏழைகளுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் மலிவு விலையில் வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி ரூ.3க்கும், கோதுமை கிலோ ரூ.2க்கும் மற்ற உணவு தானியங்கள் கிலோ ரூ.1,க்கும் வழங்கப்படும். நாட்டின் மக்கள் தொகையில் 67 சதவீதம் பேர் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளி குடும்பங்களுக்கு தலா 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படும்.  இதற்கு அரசு ரூ.1.25 லட்சம் கோடி செலவிடும். 

by Swathi   on 04 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.