LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்திய வி.ஐ.பிக்கள் பயணிக்க ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் விதிமீறல் ! சி.ஏ.ஜி. புதிய அறிக்கை !

இந்திய விமானப் படைக்கு இத்தாலி நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டிடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில், ராணுவ அமைச்சகம், பாதுகாப்பு துறையும் பல நிலைகளில் விதிமுறைகளை மீறியுள்ளதாக, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) நடாளமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக 12 அதி நவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்ததில், பல்வேறு விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. பாதுகாப்பு துறை கொள்முதல் குறித்த விதிமுறைகளை, ராணுவ அமைச்சகம் மீறியுள்ளது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனம், ஹெலிகாப்டர் கொள்முதலுக்காக 3, 966 கோடி ரூபாய் கோரியிருந்தது. ஆனால், ஒப்பந்த பேச்சுவார்த்தை கமிட்டி அதை விட, அதிகமான தொகையாக 4, 871 கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளது. எந்தவித காரணமும் இல்லாமல், அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.


ஹெலிகாப்டர்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான சோதனை ஓட்டங்களை, இந்தியாவில் நடத்தப்படாமல், வெளிநாடுகளில் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களுக்கான சோதனை ஓட்டங்களை, வெளிநாடுகளில் நடத்தியது ஏன்?அப்போது, (2007ல்) விமானப் படை தளபதியாக இருந்தவர் தான், வெளிநாடுகளில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கு பரிந்துரைத்துள்ளார். வி.ஐ.பி.,க்களுக்கான ஹெலிகாப்டர் வாங்குவதற்கான, "டெண்டர்' துவங்கியதிலிருந்து, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது வரை, பல்வேறு விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன.அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து, எந்த ரக ஹெலிகாப்டர் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டதோ, அந்த ரக ஹெலிகாப்டர்களை சோதனை ஓட்டத்துக்கு உட்படுத்தாமல், வேறு ரக ஹெலிகாப்டர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், "ஹெலிகாப்டர் பறக்கும் திறன், 6,000 மீட்டராக இருக்க வேண்டும்' என, ராணுவ அமைச்சகம் ஏற்கனவே நிபந்தனை வரையறை செய்திருந்தது. ஆனால், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்ட ஹெலிகாப்டரின் பறக்கும் திறன், இதை விட குறைவானது.இவ்வாறு, சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

by Swathi   on 13 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.