LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை மாநகர மக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க புதிய வசதி !!

சென்னை நகர மக்களின் முக்கிய பிரச்னைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக, பொது மக்களே தங்களின் குறைகளை பதிவு செய்யும் வசதியை, கால் பார் சேன்ஜ்  என்ற அமைப்பு துவக்கியுள்ளது.

 

இதுதொடர்பாக அந்த பிரசார இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை நகரவாசியாக நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளை, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல 011-66030009 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டவுடன் உங்களது அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும் என்றாலும், உடனடியாக மீண்டும் உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று, உங்கள் சென்னை நகரில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளை உங்கள் குரலில் பதிவு செய்யலாம்.

 

இந்த குரல் பதிவு www.oursay.org/chennai என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என கால் ஃபார் சேன்ஜ் பிரசார இயக்கம் தெரிவித்துள்ளது.

by Swathi   on 03 Feb 2014  0 Comments
Tags: Chennai Peoples   Chennai Peoples Problems   Call for Change   Call for Change Chennai   Chennai Call for Change   சென்னை மக்களின் பிரச்சனை   சென்னை நகர மக்களின் பிரச்சனை  
 தொடர்புடையவை-Related Articles
சென்னை மாநகர மக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க புதிய வசதி !! சென்னை மாநகர மக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க புதிய வசதி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.