LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

பஞ்சாயத்து அப்ரூவல் மனைக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

பொதுவாக சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி அப்ரூவல் மனைகளில் பெரிய அளவில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. மனைக்கான கிரயப் பத்திரத்தில் தொடக்கி, பட்டா உள்ளிட்ட பல ஆவணங்களையும் தொடர்புடைய அமைப்புகள் அலசி ஆராய்ந்து விடும். மேலும் விதிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்ட லே அவுட்களுக்கு மட்டுமே அவை அனுமதி கொடுக்கின்றன. ஆனால் பஞ்சாயத்து அப்ரூவலில் மனைக்கான ஆவணங்கள், லே அவுட் பிளான்கள் எதையும் பஞ்சாயத்துத் தலைவரோ, பஞ்சாயத்து அதிகாரிகளோ பெரிய அளவில் பார்ப்பதில்லை. எனவே ஆவணங்கள் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை வாய்ந்தவை என்பதில் வங்கிகளுக்கு சந்தேகம் வருவதுண்டு.


சென்னை முழுவதும், காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில பகுதிகள் சி.எம்.டி.ஏ அப்ரூவல் கீழ் வருகின்றன. மற்ற அனைத்துப் பகுதிகளும் டி.டி.சி.பி அப்ரூவல் கீழ்தான் வருகின்றன. பொதுவாக வீடு கட்டும்போது சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி அப்ரூவல் வாங்குவதோடு உள்ளாட்சி அமைப்புகளிடமும் அனுமதி பெற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என எதுவாக இருந்தாலும் இதுதான் நடைமுறை.


இப்படி இரு அமைப்புகளிடமும் அனுமதி பெற்ற வீட்டு மனைகளுக்கு வங்கிகள் கடன் அளிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. வெறும் பஞ்சாயத்து அப்ரூவல் மட்டும் வாங்கி விட்டு கடன் கேட்டால் வங்கிகள் கடன் அளிக்காது. நீங்கள் வாங்கிய இடத்தில் அரசு திட்டம் ஏதேனும் வருகிறதா என்பது சி,எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அமைப்புகளுக்குத்தான் தெரியும். இதற்கு விடை கிடைக்காமல் வங்கிகள் கடன் அளிக்காது. எனவே, பஞ்சாயத்து அப்ரூவலுடன், டி.டி.சி.பி அப்ரூவல் வாங்கிய பிறகு வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்தால் கடன் எளிதாக பெற்று விடலாம்.

by Swathi   on 18 Feb 2014  0 Comments
Tags: Panchayat Approval   Panchayat Approval Tamil   Housing Loan   Home Loan   பஞ்சாயத்து அப்ரூவல்   வீட்டுக் கடன்   பஞ்சாயத்து அப்ரூவல் மனை  
 தொடர்புடையவை-Related Articles
பஞ்சாயத்து அப்ரூவல் மனைக்கு வங்கிக் கடன் கிடைக்குமா? பஞ்சாயத்து அப்ரூவல் மனைக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.