|
|||||
சோம்பேறிகளுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் |
|||||
மனித குலத்தை மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கர வியாதிகளுள் ஒன்று புற்றுநோய் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. புற்றுநோயை முழுமையாக விரட்ட நம் மருத்துவ முறைகளில் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை இருப்பினும், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது. ஆம் சோம்பல் வாழ்க்கை. `புகையிலை, மது' போன்ற பழக்கங்களுக்கும் புற்றுநோயில் முக்கியப் பங்குண்டு என்பது உண்மை தான். புற்றுநோயை பற்றிய ஒரு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் செல்வ வளமை, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதே. மார்பகப் புற்று நோய், புராஸ்டேட், குடல் புற்றுநோய் போன்றவை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்களை அதிகம் பாதிக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால் இங்கும் கேன்சர் அபாயம் அதிகரித்து வருகிறது.
புகையே பகை :
புகைப்பதைக் குறைப்பது மற்றும் உடல் பருமனைத் தடுப்பதன் மூலம் புற்று நோய்க்குத் தடை போடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஹெபடைடிஸ் பி மற்றும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருநëது நல்ல பலனைக் கொடுக்கும். முன் பரிசோதனை செய்து உரிய சிகிச்சையைத் தொடங்குவது சிறந்தது.
ஏற்றத்தாழ்வு :
குறைந்த வருவாய் நாடுகளில் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பது, தொற்று சம்பந்தப்பட்ட கழுத்து, இரைப்பை புற்று நோய் பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்திருக்கிற போதிலும், புகைப் பழக்கம், உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய புற்று நோயாளிகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது. இந்தப் புற்று நோய்கள் பொதுவாக, பணக்கார நாடுகளில்தான் அதிகம் காணப்படுவது வழக்கம். |
|||||
by Swathi on 28 Sep 2012 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|