LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ராஜா ராணி படத்திற்கு தடைகோரி வழக்கு !!

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஆர்யா, நயன்தாரா, ஜெய்., நஸ்ரியா நடித்த படம் ராஜாராணி. இந்தப்படம் வெளியாகி 100 நாட்கள் ஓடி, வெற்றி விழாவும் முடிந்த நிலையில், இந்த படத்திற்கு தடைகோரி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.சிவகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

சிவகுமார் தனது மனுவில் கூறியிருப்பதாவது, நான் ஏர்வாய்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன், ஏர்வாய்ஸ் என்ற வர்த்தக குறீயிட்டை 2006ம் ஆண்டே பதிவு செய்து வைத்திருக்கிறேன். என் கம்பெனி பெயரை ராஜாராணி படத்தில் பயன்படுத்தி உள்ளனர். படத்தில் வரும் கேரக்டர்கள் என் கம்பெனி பெயரைப் பற்றி தவறாக பேசுகிறார்கள். ஏர்வாய்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டை குறைகூறும் காட்சிகளும் உள்ளது. இது என் கம்பெனியின் இமேஜை பாதித்துள்ளது. ஏர்வாய்ஸ் பெயரை பயன்படுத்த என்னிடம் அனுமதியும் பெறவில்லை. எனவே ராஜாராணி படத்தை தியேட்டர்களில் டிவிடிக்களில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடைவிதிக்க வேண்டும்" என சிவகுமார் தனது மனுவில் கூறியுள்ளார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோ நிறுவனம், நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

by Swathi   on 08 Jan 2014  0 Comments
Tags: ராஜா ராணி   ராஜா ராணி படத்திற்கு தடை   படத்திற்கு தடை   முருகதாஸ் மீது வழக்கு   Raja Rani   Raja Rani Movie   Raja Rani Case  
 தொடர்புடையவை-Related Articles
ராஜா ராணி படத்திற்கு தடைகோரி வழக்கு !! ராஜா ராணி படத்திற்கு தடைகோரி வழக்கு !!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக்காகும் ராஜா ராணி !!! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக்காகும் ராஜா ராணி !!!
ராஜா ராணி திரை விமர்சனம் !!! ராஜா ராணி திரை விமர்சனம் !!!
ராஜாராணி ஆட்டம் ராஜாராணி ஆட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.