ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஆர்யா, நயன்தாரா, ஜெய்., நஸ்ரியா நடித்த படம் ராஜாராணி. இந்தப்படம் வெளியாகி 100 நாட்கள் ஓடி, வெற்றி விழாவும் முடிந்த நிலையில், இந்த படத்திற்கு தடைகோரி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.சிவகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிவகுமார் தனது மனுவில் கூறியிருப்பதாவது, நான் ஏர்வாய்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன், ஏர்வாய்ஸ் என்ற வர்த்தக குறீயிட்டை 2006ம் ஆண்டே பதிவு செய்து வைத்திருக்கிறேன். என் கம்பெனி பெயரை ராஜாராணி படத்தில் பயன்படுத்தி உள்ளனர். படத்தில் வரும் கேரக்டர்கள் என் கம்பெனி பெயரைப் பற்றி தவறாக பேசுகிறார்கள். ஏர்வாய்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டை குறைகூறும் காட்சிகளும் உள்ளது. இது என் கம்பெனியின் இமேஜை பாதித்துள்ளது. ஏர்வாய்ஸ் பெயரை பயன்படுத்த என்னிடம் அனுமதியும் பெறவில்லை. எனவே ராஜாராணி படத்தை தியேட்டர்களில் டிவிடிக்களில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடைவிதிக்க வேண்டும்" என சிவகுமார் தனது மனுவில் கூறியுள்ளார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோ நிறுவனம், நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
|