காவிரி மேற்பார்வைக் குழுவின் மூன்றாவது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், கர்நாடக அரசின் தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத், கேரள அரசு சார்பில் அந்த மாநில நீர் வளத் துறை தலைமைப் பொறியாளர் லத்திகா, புதுச்சேரி அரசு சார்பில் ஒரு அதிகாரி ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூடத்தில் கர்நாடக அரசு ஜூலை மாதத்திற்குள் தரவேண்டிய 34 டிஎம்சி நீரில் 24 டிஎம்சி நீர் வழங்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 10 டிஎம்சி நீர் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என தெரிவித்தது. பருவ மழை அதிகமாக பெய்தால் மட்டுமே ஆகஸ்ட் மாதத்துக்கான 50 டிஎம்சி நீரை திறந்துவிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என கர்நாடக அரசு சார்பில் தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத் தெரிவித்தார். எனினும், கூட்ட முடிவில் தனது உத்தரவை மேற்பார்வைக் குழுவின் தலைவர் அலோக் ராவத் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|