உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடகா காவிரியில் திறந்து விட்ட தண்ணீர் நேற்று மேட்டூர் அணையை வந்தடைந்தது.கடந்த 6ம் தேதி இரவு கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. அந்த நீர் மறுநாள் தமிழகத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டதுஆனால் ஆற்றில் பல இடங்கள் வறண்டு கிடந்ததால் ஆங்காங்கே உள்ள பள்ளங்களிலும் தண்ணீர் நிரம்பியது. இதனால், தாமதம் ஏற்பட்டு நேற்று முன்தினம் மாலை பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது. அங்கிருந்து மேட்டூர் அணையை நீர் வந்தடைவதிலும் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேர 10 மணி நேரமாகும். ஆனால், நேற்று காலை 8 மணி வரை 14 மணி நேரமாகியும் நீர் வந்து சேரவில்லை. அப்போது, அணையின் நீர் மட்டம் 47.85 அடியாக இருந்தது. இந்நிலையில், நேற்று நண்பகல் நேரத்தில் கர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அதிகாலை வரை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நண்பகல் நேரத்தில் வினாடிக்கு 11,500 கனஅடியாக அதிகரித்தது.
|
The initial flows of the Cauvery water, released from Krishna Raja Sagar Reservoir in Karnataka on Dec 6 th night, reached the Mettur on Sunday Afternoon.This was in response to the direction of the Supreme Court to Karnataka to release 10,000 cusecs till Monday.The water level at 8 a.m. on Sunday stood at 47.85 feet with inflow of 3,600 cusecs and outflow of 10,000 cusecs.Earlier, the zero point of the river course at Billigundlu on the inter-State border recorded the early flows.which was around 10,000 cusecs at 6 a.m., crossed 11,000 cusecs four and a half hours later. At 1-30 p.m., the inflow was 11,700 cusecs.
|