காவிரியில் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரை வழங்கக்கோரி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று ரயில் மறியல் நடைபெற்றது. இதற்கு அழைப்பு விடுத்த இந்திய கம்யூனிஸ்டு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தில், தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், திருவாரூரில் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி, மன்னார்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ சிவபுண்ணியம், நாகையில் மத்திய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு, மயிலாடுதுறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன், சீர்காழியில் குடியாத்தம் எம்.எல்.ஏ. லிங்கமுத்து ஆகியோர் தொண்டர்களுடன் கலந்துகொண்டு கைதாகினர்.
|