|
|||||
நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பிரதமர் அலுவலக முன்னாள் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை ! |
|||||
நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலக முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை சமீபத்தில் அறிவித்தது. ஊழல் நடைபெற்ற காலகட்டத்தில், பிரதமர்
மன்மோகன்சிங், நிலக்கரி இலாகாவை கவனித்து வந்ததால், அவரது அலுவலகம் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை மத்திய சட்ட மந்திரியாக இருந்த
அஸ்வினி குமாரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் பார்வையிட்டு திருத்தியதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. இயக்குனர் தெரிவித்தார். இதனை அடுத்து சட்ட மந்திரியாக இருந்த அஸ்வினி குமார்
தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த வினி மகாஜன், ஆஷிஸ் குப்தா ஆகியோரிடம் விளக்கம்
பெற வேண்டும் என்று சிபிஐ விசாரணைக்கு அழைத்தது. இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும் நிலக்கரி சுரங்க ஊழலில்
குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிலக்கரித் துறை அமைச்சக செயலர் ஹெச்.சி.குப்தாவையும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோல் பிரதமரின் ஆலோசகரான டி.கே.ஏ.
நாயரிடமும் விசாரணை நடத்த இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலக முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
|
|||||
by Swathi on 18 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|