LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கண்காணிப்பு கமராக்கள் பிடியில் சார் - பதிவாளர் அலுவலகங்கள் !! பத்திர பதிவில் புதிய நடைமுறைகளும் அமலுக்கு வருகின்றன !!

தமிழகத்தில் உள்ள அனைத்து சார் - பதிவாளர் அலுவலக செயல்பாடுகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் உயர் அதிகாரிகள் கண்காணிக்க தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் பத்திரப் பதிவிலும், சில நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

 

தமிழகத்தில் 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில், சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும், நில மோசடி, பத்திர பதிவின் போது ஆள்மாறாட்டம் போன்ற புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை அடுத்து, இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில், அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி, 'எல்காட்' உதவியுடன் முடிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பத்திரப் பதிவு நடைமுறைகளிலும் சில மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அவை பின்வருமாறு,

 

மூன்று காமராக்கள் சார் - பதிவாளர் அலுவலகங்களில் பொருத்தப்படும், இதில் ஒன்று, உட்புறமிருந்து நுழைவாயிலை நோக்கி அமைக்கப்படும். இந்த கமிரா அலுவலகத்திற்கு வந்து செல்பவர்களை கண்காணிக்கும், இதற்கு அடுத்தபடியாக, சார் - பதிவாளர் இருக்கையை நோக்கி இருக்கும் வகையில், ஒலி, ஒளி காட்சிகள் பதிவாகும் வகையில், ஒரு கேமரா செயல்படும். பத்திரப்பதிவின் போது, சொத்து விற்பவர், வாங்குபவர், சாட்சிகள், உடன் இருப்பவர் என, அனைவரது செயல்பாடுகளும் இதில் துல்லியமாக பதிவாகும்.

 

ஒவ்வொரு பத்திரப்பதிவு குறித்த நிகழ்வுகள், 20 நிமிடம் வரை பதிவாகும். இந்த பதிவின் பிரதியை மட்டும், சொத்து விற்பவர், வாங்கு வோர், 50 ரூபாய் கட்டணம் செலுத்தி, குறுந்தகடாக பெற்றுக் கொள்ளலாம். இவ்விரு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, அந்தந்த மண்டலத்துக்குரிய பதிவுத் துறை துணை தலைவர் அலுவலகத்தில் இருந்தும், சென்னையில் உள்ள பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்தும் நேரடியாக கண்காணிக்க முடியும். மேலும், சந்தேகத்திற்குரிய நிகழ்வு நடைபெறும் பட்சத்தில், பதிவுத் துறை துணை தலைவர் அல்லது பதிவுத் துறை தலைவர், நேரடியாக சம்பந்தப்பட்ட சார் - பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கவும் முடியும்.

 

தற்போது பத்திரப்பதிவின் போது, விற்பவர், வாங்குபவர் இருவரது புகைப்படம், கைரேகை போன்றவை பத்திரத்தின் முதல் பக்க பின்புறம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, பதிவுக்கு வருவோர் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எடுத்து வரவேண்டியிருந்தது. இனி, பதிவுக்கு வருவோரின் புகைப்படம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள, மூன்றாவது கேமரா மூலமே நேரடியாக எடுக்கப்படும். மேலும், இதுவரை 'மை' பயன்படுத்தி கைரேகை பதிவு செய்த நடைமுறை மாற்றப்பட்டு, 'பயோ மெட்ரிக்' முறையில் இனி கைரேகை பதிவு செய்யப்படும்.இப்புதிய நடைமுறைகள் சார் - பதிவாளரை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் கேமரா மூலம் பதிவு செய்யப்படும். இந்த மாற்றங்கள் அனைத்தும், நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.  அடுத்த 12 நாட்களில் இந்த புதிய நடைமுறை முழுவதும் அமலுக்கு வரும் என பத்திர பதிவுத் துறை தெரிவித்துள்ளது. 

by Swathi   on 04 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.